பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/17/2011

சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆசிரியர் பணி : 341 பேரை தேர்வு செய்ய 27ம் தேதி சிறப்புத் தேர்வு

சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களில், 341 பேருக்கு, ஆசிரியர் பணி வழங்கும் வகையில், 27ம் தேதி சிறப்பு போட்டித் தேர்வு நடக்கிறது. சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றில், பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அவ்வப்போது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்படும்.

பி.எட்., தகுதி நிலையில், 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில், குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள், மீண்டும் தங்களது பழைய பணியில் தொடரலாம். தேர்வானவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஏற்கனவே, இருமுறை நடந்த தேர்வுகளின் மூலம், 630 பேர், ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.

வெறும் சடங்கு? : இதுபோன்ற சிறப்புத் தேர்வுகளில், தேர்வெழுதும் தகுதி வாய்ந்தவர்களில் பெரும்பாலானோர் தேர்வு பெற்று விடுகின்றனர். கடந்த காலங்களில் நடந்த சிறப்புத் தேர்வுகளில், சில கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. எனவே, இத்தேர்வை பலத்த போலீஸ் பாதுகாப்புடனும், அன்னியர் மற்றும் மையத்தைச் சார்ந்தவர், தேர்வர்களை அணுகாத அளவிற்கும், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமலும், முழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களில், 341 பேருக்கு, ஆசிரியர் பணி வழங்கும் வகையில், 27ம் தேதி சிறப்பு போட்டித் தேர்வு நடக்கிறது. சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றில், பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அவ்வப்போது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்படும்.

பி.எட்., தகுதி நிலையில், 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில், குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள், மீண்டும் தங்களது பழைய பணியில் தொடரலாம். தேர்வானவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஏற்கனவே, இருமுறை நடந்த தேர்வுகளின் மூலம், 630 பேர், ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.

வெறும் சடங்கு? : இதுபோன்ற சிறப்புத் தேர்வுகளில், தேர்வெழுதும் தகுதி வாய்ந்தவர்களில் பெரும்பாலானோர் தேர்வு பெற்று விடுகின்றனர். கடந்த காலங்களில் நடந்த சிறப்புத் தேர்வுகளில், சில கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. எனவே, இத்தேர்வை பலத்த போலீஸ் பாதுகாப்புடனும், அன்னியர் மற்றும் மையத்தைச் சார்ந்தவர், தேர்வர்களை அணுகாத அளவிற்கும், தேர்வில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமலும், முழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக