பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/31/2011

கர்ப்பிணிகளையும், "அபார்ஷன்' ஆன ஆசிரியைகளையும் விட்டு வைக்காத தேர்தல் கமிஷன்

பொது மக்கள் பாராட்டும் வகையில், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுக்கும் தேர்தல் கமிஷன், அதே பாணியை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களிடமும் காட்டுவது, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணி என்றாலே, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அல்லாட வேண்டியிருக்கும் என்பதாலும், தேர்தலின்போது அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாலும், இந்தப் பணிகளை பெரும்பாலும் யாரும் விரும்பி ஏற்பதில்லை. அரசு ஊழியர்களாக இருப்பதால், வேறு வழியின்றி தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாத நிலை இருப்பதை ஊழியர்கள் எடுத்துக் கூறினாலும், அதிகாரிகள் கேட்பதில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும் என, பல இடங்களிலும் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். 

கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும், தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில், பல ஆசிரியைகள் எட்டு, ஒன்பது மாத கர்ப்பிணிகளும், பச்சிளம் குழந்தை உள்ள ஆசிரியைகள் உட்பட பலர் உள்ளனர். தேர்தல் பணி ஒதுக்கீட்டு உத்தரவு வந்ததும், பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்று, தேர்தல் பணி பார்க்க முடியாத நிலையை, ஆசிரியைகள் விளக்கமாக கூறியுள்ளனர். ஆனாலும், எதையுமே அதிகாரிகள் காதில் வாங்கவில்லை என, கூறப்படுகிறது. சம்பந்தபட்ட ஆசிரியைகள், பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 


சிங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கு திடீரென, "அபார்ஷன்' ஆகியுள்ளது. இதனால், டாக்டர் அறிவுரைப்படி ஓய்வெடுக்க விடுமுறை எடுத்துள்ளார். ஆனால், இவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அந்த ஆசிரியை கூறியதாவது: 
எனக்கு,சில தினங்களுக்கு முன் தான், "அபார்ஷன்' ஆனது. எனது உடல்நிலையை ஆய்வு செய்த டாக்டர், ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என கூறினார். அதன்படி, மருத்துவ விடுப்பின் கீழ், ஒரு மாதம் கருச்சிதைவு விடுப்பு எடுத்துள்ளேன். ஆனாலும், தேர்தல் பணிக்கு வந்தே ஆக வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்தினர். தேர்தல் பணி உத்தரவைக்கூட, எனது தந்தை தான் வாங்கி வந்தார். பல நாட்கள் அலையவிட்டதால், எனது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், இன்று தான் (நேற்று) தேர்தல் பணி உத்தரவை ரத்து செய்தனர். 

ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்வதென தெரியாமல், பலரும் கலக்கமாக இருக்கின்றனர்.


பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியை கூறும்போது,"எனக்கு நான்கு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டியிருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் விவரத்தைக் கூறி, அவரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தேன். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல், தற்போது, "மெமோ' அனுப்பியுள்ளனர்' என்றார்.


கர்ப்பிணி ஆசிரியைகளை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் : 
ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேல் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வள மைய ஆசிரியர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள 220 ஆசிரியர்கள் மட்டும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக, ஆள் பற்றாக்குறை என கூறி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கும், ஒரு மாதம், இரண்டு மாதம் குழந்தை உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கியுள்ளனர். ஆசிரியைகள், தங்களது பிரச்னையை மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக சுந்தரத்திடம் எடுத்துக் கூறினர். அவர் கேட்கவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியைகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கர்ப்பிணி ஆசிரியைகளையும், இளம் தாய்மார்களாக உள்ள ஆசிரியைகளையும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரவேல் கூறினார்.
நன்றி:


 

இந்திய மக்கள் தொகை 121.2 கோடி!-கல்வியறிவு பெற்றோர் 74%

இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

3/30/2011

FINANCE (PENSION) DEPARTMENT

P
Revised rate admissible from 1
ENSION - Dearness Allowance to the pensioners and family pensioners -st January, 2011 - Orders - Issued.

3/29/2011

G.O.No.98 (Tamil)


தபால் வாக்கிற்கு தங்கள் விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

அகவிலைப்படி உயர்வு அரசாணை எண்-98(நிதி) நாள்: 28.3.11 click Here

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதிய பென்ஷன் மசோதா ரத்து செய்ய வலியுறுத்தல்

 புதிய பென்ஷன் மசோதாவை ரத்து செய்ய, அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசு, புதிய பென்ஷன் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. 

இதன்படி மத்திய அரசில் 1.1.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும், இத்திட்டம் அமல் படுத்தப்படவுள்ளது. இதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதமும், அரசு 10 சதவீதமும் செலுத்தும். ஓய்வு பெறும் போது எவ்வளவு பென்ஷன் வழங்கப்படும் என்பது வரையறுக்கப்படவில்லை.
 

பென்ஷன் தொகையை அரசு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே பென்ஷன் தொகை வழங்கப்படும் என, அரசு தெரிவிக்கிறது. பொது சேமநல நிதியில் இருந்து கடன் பெற முடியாத நிலை புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளது. 

மேலும் இந்த மசோதாவில் மாநில அரசு விரும்பினால், 2003 க்கு முன்பு அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் செயல்படுத்தலாம் என, தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த மசோதவை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இல்லை எனில் முதல் கட்டமாக 2 மணி நேரம் வெளி நடப்பு போராட்டம் மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நன்றி:


3/26/2011

வாக்குச்சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் குளறுபடி: குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழப்பம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் காணப்படும் குளறுபடியால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.  

இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1410 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில், வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று மொத்தம் 6981 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது.  

இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) மாவட்டத்தில் 9 மையங்களில் தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப் பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், வாக்குச் சாவடி அலுவலர்களாக பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ள பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், பல பணிநியமன ஆணைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டுள்ள இடத்தில் கன்னியாகுமரி என்பதற்குப் பதிலாக மதுரை, ராமநாதபுரம், தேனி என்று பிறமாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இதனால் பிறமாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குச் செல்லவேண்டுமோ என்ற குழப்பம் உருவாகியுள்ளது. இது குறித்து விசாரித்தால் உறுதியான பதில் எதுவும் உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை.  

சம்பந்தப்பட்ட ஆணைகளில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜேந்திர ரத்னூதான் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் மாவட்டங்களின் பெயர்கள் மாறியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கை.

நன்றி



3/25/2011

6% Hiked Dearness allowance order issued by the Union Cabinet.

 

6% Hiked Dearness allowance order issued by the Union Cabinet



 
No.1(2)/2011 – E-II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
------






New Delhi, the 24th March, 2011.






OFFICE MEMORANDUM





Subject: Payment of Dearness Allowance to Central Government Employees – Revised Rates effectives from 1.1.2011.




----------------




The undersigned is directed to refer to this Ministry’s office Memorandum No. 1(6)/2010-E-II(B) Dated 22ndSeptember, 2010 on the subject mentioned above and to say that the president is pleased to decide that the Dearness Allowance payable to Central Government Employees shall be enhanced from the existing rate of 45 % to 51% with effect from 1st January, 2011. 


2.The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M No. 1 (3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders. 


3.The additional instalment of Dearness payable under these orders shall be paid in cash to all Central Government Employees. 


4.The payment of arrears of Dearness Allowance for the months of January and February, 2011 shall not be made before the date of disbursement of salary of March, 2011. 


5.These orders shall also apply to the civilian employees paid from the defense services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defense Service Estimates. In regard to Armed Forces personnel and Railway employees separate orders will be issued by the Ministry of Defense and Ministry of Railways, respectively. 


6.In so far as the persons serving in the Indian Audit and Accounts Department are concerned, these orders issue after consultation with the controller and Auditor General of India.






(Y.P. Sehgal)
Deputy Secretary to

3/24/2011

பகத்சிங்கை நினைவு கொள்வோமா?

தியாகத்தையும் ஆளும் வர்க்கம்
சுரண்டாமல் விடுவதில்லை.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு…
ஏகாதிபத்திய எதிர்ப்புச் சுடர்களை
ஏகாதிபத்திய ஏவல்நாயின் நீலிக்கண்ணீர்
அணைத்துக் கொல்லப் பார்க்கிறது.
கள்ள அழுகையால் கொள்ளையிடுகிறான்,
தியாகிகளது விடுதலைக் கனவுகளின்
தீராத விழிகளை!
அவர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால்
தியாகிகள் தினம் என்ற அரசு விளம்பரம்
மேற்கண்ட தீவிரவாதிகள் பற்றி
தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் என்று
தகவல் ஒளிபரப்பு விளம்பரமாய் இருந்திருக்கும்.
நக்சல் தேடுதல் வேட்டையில் பகத்சிங்கை போட்டுத்தள்ள
ப.சிதம்பரத்தின் கூலிப்படை கிளம்பியிருக்கும்…
தேசத்தின் வளர்ச்சிக்கு சவாலாய் இருப்பதால்
தேடப்படும் ‘பயங்கரவாதிகள்’ ராஜகுரு, சுகதேவை
முதலாளிகளின் சாணக்கிய குரு மன்மோகன் விழி குறிபார்த்து சுட்டிருக்கும்
செத்ததனால் நினைவஞ்சலி
இருந்திருந்தால் என்கவுண்ட்டர்!
பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக்
கொலை செய்பவனே… நினைவஞ்சலி செலுத்துவதும்,
புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே
மலர்வளையம் வைப்பதும்,
இறந்தவர்களுக்கல்ல,
இன்னும் புரட்சியை நிகழ்ச்சி நிரலாக்காமல்
உயிரோடிருக்கும் நம் இயலாமையின்
அவமானங்கள்!
வெறும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
சம்பவம் என்பதற்காக அவர்கள் தூக்கிலிடப்படவில்லை.
வர்க்க ‘ஒழுங்கை’ ஆதிக்கத்தை புரட்டிப்போடும்
அவர்களின் அரசியல் கண்டு ஆடிப்போனது
ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் ஆளும் வர்க்கமும்.
பகத்சிங்கின் அரசியலைப் பார்த்து மருண்டு போனது
பகைவர்கள் மட்டுமா?
ஏன்… இன்னும் புரட்சியின் தேவைகளுக்கு
செவிமடுக்காத நீயும் என்கிறது
அவர்களின் நினைவுகள்…
பசும்புல்லின் வேரிலும்
விசும்பின் நீரிலும்
கேட்பாரற்ற ஏகாதிபத்திய மேலாதிக்கம்.
தாய்ப்பாலும் கருப்பையும் கூட
தனியார்மயத்தின் விற்பனைச் சரக்காகும்
கார்ப்பரேட் பயங்கரவாதம்…
சூறைக்காற்றில் நடுங்கி நிற்கும்
மாடப்புறாக்களாய்…
திகைத்து நிற்கும் ஏழை மக்கள்…
உழைப்புச் சந்தையில்.. உறவுகள் யாருமற்று
அரசியல் அநாதைகளாய் நம் கண்முன்னே
பரிதவிக்கும் உழைக்கும் மக்கள்…
பகத்சிங் இருந்திருந்தால்
இதைப்பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா?
தன்வேலை பறிபோகும் என்ற அச்சத்தில்
கண்முன்னே போராடும் வர்க்கத்தை விட்டு ஒதுங்கி
சுகதேவ்தான் தானுண்டு வேலையுண்டு என நடப்பானா<?
புரட்சி கிளம்பும்போது
நாமும் படியில் ஏறிக்கொள்ளலாம் என
இராஜகுருதான் சாமர்த்தியம் நினைப்பானா?
எல்லாம் தெரிந்த உன்னால்
உழைக்கும் வர்க்கத்தோடு இணையத் தெரியாவிடில்
மூலதன ஆதிக்கத்திற்கெதிராக முழங்கத் தெரியாவிடில்…
பகத்சிங்கை நினைப்பதற்கும் உரிமையுண்டா?
பகத்சிங் தோழர்கள் தியாகம்
அவர்கள் சாவில் இல்லை,
பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்காக
சமரசமற்ற அவர்கள் வாழ்வில் உள்ளது.
வாழச் சம்மதமெனில் வா.. நண்பா!
பகத்சிங்கை நினைவு கொள்!
_____________________________________________
— துரை.சண்முகம்.             நன்றி: வினவு

3/22/2011

நர்சரி பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி : அரசு உத்தரவு

நர்சரி மழலையர் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நர்சரி மற்றும் மழலையர் துவக்கப் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் துவக்க கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் நடைபெற்றது. நர்சரி பள்ளிகளின் அலுவலர் திரவியம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில கலந்து கொண்டனர்.
துவக்க கல்வியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி வழங்குவது பற்றிய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது துவக்க கல்வி அலுவலர் ஞானகவுரி பேசியதாவது:-
மழலையர் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது எவ்வித பரிசீலனைக்கும் இடமளிக்கக் கூடாது. மாணவர்களின் பெற்றோர் படித்தவரா, பணியாற்றுபவரா என்றோ, மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது கூடாது.
மாணவர்கள் சேர்க்கையின் போது 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும். மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடைநீக்கம் செய்யக் கூடாது. எந்த வகுப்பிலும் இடையில் வரும் மாணவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களிடம் கல்விச் சான்றிதழ் இல்லாத நிலையில் அவர்களின் வயதுச் சான்றிதழின் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு தகுந்த வகுப்பில் சேர்க்க வேண்டும். மேலும் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகளை நடத்தக் கூடாது.
நன்றி: மதுரை போஸ்ட்

3/18/2011

மாணவர்களிடையே போதைப்பழக்கம்: ப.சிதம்பரம் தகவல்

புதுதில்லி: இந்திய நாடு போதை மருந்துகளுக்கான பெரும் சந்தையாக மாறி வருகிறது. பார்ட்டிகள் மற்றும் கல்வி நிலையங்களில் போதை மருந்துகள் புழங்குவது கவலையளிக்கிறது என்று . சிதம்பரம் குறிப்பிட்டார்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று போதைத் தடுப்பு நிறுவனத்தில் (என்சிபி) உரையாற்றும் போது குறிப் பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் கோகைன் மற் றும் பிற போதை மருந்துகளின் உபயோக மும் கடத்தலும் அதிகரித்துள்ளது. போதை மருந்துகள் தடுப்பு விஷயத்தில் நாம் போது மான கவனத்தை செலுத்தவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது என்று அவர் கூறினார்.
இரு பெரும் போதை மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே இந்தியா உள் ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க முக்கோணம், தங்கப்பிறை என்று அழைக்கப்படும் பகுதி இந்தியாவை ஊடுருவிச் செல்கிறது. இதன்காரணமாக, இந்தியா போதைப் பொருட்களின் சந்தையாக மாறிவருகிறது.
போதைமருந்துகள் தடுப்பு அமைப் பில் போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வில்லை என்பது வருந்தத் தக்க விஷயம். இந்நிலையை மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று .சிதம்பரம் தெரிவித்தார்.
நன்றி: தீக்கதிர்

3/17/2011

சிறப்பு ஆசிரியர்களுக்கான சிஆர்இ பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


        பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பல்கலைக்கழக ஊனமுற்றோர் மேலாண்மை மற்றும் சிறப்புக் கல்வியியல் புலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடிய சிறப்பு ஆசிரியர்களுக்காக நடக்கவுள்ள சிஆர்இ (தொடர் மறுவாழ்வுக் கல்வி) பயிலரங்கில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென பணியாற்றும் அனைத்து சிறப்பு ஆசிரியர்கள், வல்லுநர்கள் இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற அதிகார அமைப்பான இந்திய மறுவாழ்வுக் கழகத்தில் பதிவு செய்து பதிவெண் பெற்றிருக்க வேண்டும். இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு இக்கழகம் நடத்தும் இதுபோன்ற பயிலரங்குகளில் பங்கேற்று 100 புள்ளிகளைப் பெற வேண்டும்.
இல்லையெனில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிடுவர். இதுபோன்ற பயிலரங்கு வரும் 22 ம் தேதிமுதல் 26 ம் தேதி வரை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பல்கலைக்கழத்தில் நடக்கிறது.
"சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி' என்ற தலைப்பில் நடக்கும் இந்தப் பயிலரங்கில் அமர்வுகள், செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர், 0422-269 7529,269 8553 என்ற தொலைபேசி எண்களில், விரிவுரையாளர் சுதாவை தொடர்பு கொள்ளலாம்

நன்றி : தினமணி

3/16/2011

dual degree

ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு கால அட்டவணைக்கு மட்டும்