நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளிடமிருந்து 2014-15ம் ஆண்டிற்குரிய கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
2014-15ம் ஆண்டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தொழிலாளர் நல அலுவலகத்திற்கு அனுப்பப்படுவதற்கு பதில் கல்வி நிர்வாகமே வைத்துக் கொள்ளலாம்.
மேலும் தொழிலாளர் நல அலுவலகம் கொடுத்துள்ள நிபந்தனைகள் அடிப்படையில் கல்வி நிர்வாகம் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒருங்கிணைந்த பட்டியல் மற்றும் வங்கி கணக்கு விபரம், அடையாள அட்டை நகலை தொழிலாளர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைந்த பட்டியல் மற்றும் அதற்கான குறுந்தகடுகளை நல ஆணையாளர், இந்திய அரசு தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு தொழிலாளர் நல அமைப்பு, செயின்ட் தாமஸ் ரோடு, ஹைகிரவுண்டு, திருநெல்வேலி -11 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக