பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/14/2014

செப்டம்பர் 25ம் தேதி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்

சென்னை: "பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 25ம் தேதி துவங்கும்" என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் மற்றும் அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு துணைத் தேர்வுகள், செப்டம்பர் 25ம் தேதி துவங்குகின்றன. பிளஸ் 2 துணைத் தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி துவங்கி, அக்டோபர் 9ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள்  அக்டோபர்  4ம் தேதி வரையும் நடக்கின்றன.
விண்ணப்பிக்க அவகாசம்
ராமநாதபுரம்: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு சேவை மையங்கள் (நோடல் சென்டர்கள்) மூலம் விண்ணப்பிக்க, இன்று (ஆகஸ்ட் 14) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக., 19 வரை அவகாசம் (3 நாள் விடுமுறை தவிர) நீட்டிக்கப்பட்டுள்ளது.
"அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் www.tndge.in என்ற இணையதள முகவரியில், தேர்வு சேவை மைய விவரத்தை தெரிந்து கொண்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்" என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக