சிவகங்கை, :காளையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. வட்டாரத்தலைவர் சூசைநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமஸ்அமலநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேதராஜசேகரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜான்அந்தோணி வேலை அறிக்கை வாசித்தார். காளையார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள 14பணியிடங்களுக்கு இருவர் மட்டு மே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அலுவல் தொடர்பான பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நி¬வேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் சந்திரசேகர், ஜான்கென்னடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக