சிங்கம்புணரி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ஞான அற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை சுட்டிக்காட்டி உரிமைகளைப் பறிக்கும் அடக்குமுறையை கைவிட வேண்டும். ஆண்டு முழுவதும் மாறுதல் ஆணைகள் என்பதை கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்குச்சீட்டு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்திய தொகைக்கு கணக்குச்சீட்டு வழங்கிடல் வேண்டும்.
மேற்படிப்பு அனுமதிக்கு உரிய காலத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வட்டார செயற்குழு உறுப்பினர் அஜ்மிர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக