பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/31/2015

வெற்றிகரமாக நடந்தேறிய சிவகங்கை த.மு.எ.க.ச.மாவட்ட மாநாடு

சிவகங்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு திருப்பத்தூர் பிரபா செல்வி மஹாலில் இன்று சிறப்பாக நடந்தேறியது. வாழ்த்துரை வழங்க மாவட்ட அமைப்பால் அழைக்கப்பட்டிருந்தேன். விழாவிற்கு தோழர்களுடன் பயணம் செய்கையில் வட்டாரத்தலைவர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையார் மறைவு செய்தி எட்டியது. எனவே இயக்க தோழர்களை உடனடியாக இறுதி சடங்கு வேலைகளை கவனிக்க பாதி வழியிலேயே திருப்பி அனுப்பிவிட்டு வட்டாரச் செயலாளர் திரு.பால்துரை, கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.சுரேஷ் ஆகியோருடன் திருப்பத்தூர் பயணமானோம். மாவட்ட மாநாட்டில் சிறப்பு அழைப்பாளாராக அழைக்கப்பட்டிருந்த மதிப்புமிகு தோழர் இரா.தெ.முத்து அவர்களை ரேடியாக சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் அவரே எனக்கு கைத்தறி ஆடை போர்த்தி கௌரவித்தது, எனது அருகிலே அமர்ந்து மதிய உணவு அருந்தியது என இரட்டிப்பு மகிழ்வு. மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய நான் சிங்கம்புணரியில் விரைவில் த.மு.க.எ.ச. கிளையை அமைப்பது எனவும், வருகிற மே-2015ல் சிங்கம்புணரி கிளையின் சார்பாக கலை இரவு நடத்துவது எனவும் உறுதியளித்துள்ளேன். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழர்கள், கலை ஆர்வம் மிக்க நண்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். மேலும் த.மு.எ.க.ச. தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொண்டு இச்சமுதாயத்தை நல்வழி படுத்த வேண்டும் என்ற எனது அவாவையும் வெளிப்படுத்தியுள்ளேன். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் நீண்ட நேரம் கருத்து பரிமாற்றம் செய்தது மகிழ்ச்சி அளித்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய திருப்பத்தூர் கிளைக்கும், குறிப்பாக எமது அமைப்பின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தேழர் சிங்கராயருக்கும் பாராட்டுகள்.
மாவட்ட மாநாடு முடிவில்
மாவட்டத் தலைவராக ஜீவசிந்தன்,
செயலாளராக சங்கரசுப்பிரமணியன்,
பொருளாளராக செல்வக்குமார்,
துணைத்தலைவர்களாக குணசேகரன்,ராசேந்திரன்,செல்வகதிரவன்,
துனைச்செயலாளர்களாக ஜனநேசன்,தமிழ்கனல்,குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக