பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/20/2015

தோழனே ஆர்ப்பரித்து வா!!! ஆயத்த கூட்டம் அரங்கு நோக்கி!!!!

எந்த கோரிக்கை வென்றெடுக்க எல்லாரும் ஒன்று கூட வேண்டும் என நீ விரும்பினாயோ... அந்த கோரிக்கை வென்றெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டன. ஜாக்டோ இயக்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் வருகிற 22.2.2015 அன்று காலை 10.00மணிக்கு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கனவு நினைவாக திட்டம் தீட்டும் இடம். உன் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும். இயக்கங்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து கோரிக்கை வெல்வதே ஒரே நோக்கம் என ஒன்று கூடி உரத்த குரலில் கூவத் தொடங்கி விட்டன. மௌனம் காத்த தமிழக அரசு கூட 25.2.2015 அன்று இயக்க தலைமைகளை சந்திக்க நேரம் கொடுத்து விட்டது. கலைந்த மௌனம் உத்தரவாக மாற நமது கூட்டத்தின் வலிமையை அரசுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அளவு மாற்றம்தான் குணமாற்றத்ததை உண்டு பண்ணும். இந்த போராட்டத்திலும் பங்கேற்க முடியாமைக்கு காரணங்களை தேடி அலையாதே! காரணங்கள் கேட்டு கேட்டு இயக்க பொறுப்பாளரகள் அலுத்து விட்டார்கள். இது நல்ல தருணம். இதை தவற விட்டால் மீண்டும் வென்றெடுக்க இயலாமல் போய்விடும். எனவே தோழமைகளே போராட்ட ஆயத்த கூட்டத்தில் தவறாது கலந்த கொண்டு உன் பின்னால் உள்ள படையை திரட்ட தயாராகு. இந்த கூட்டத்தில் மாவட்ட, வட்டார, நகர, பொறுப்பாளரக்ள கலந்த கொள்ள மாநிலத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. எனவே உன் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்....
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக