பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/30/2015

வருமான வரித் தொகையை மின்னணு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமான வரித்தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ். மூலம் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ஆசிரியர், அரசு ஊழியர் என மாத சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித் துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
பிடித்தம் செய்யப்படும் வரித்தொகை ஒவ்வொரு மாதமும் அந்த துறை சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களால் அவர்களுக்குரிய வரிவிலக்கு சேகரிப்பு எண்ணை பயன்படுத்தி கருவூலகங்கள் மூலம் அலுவலர்களின் மொத்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அப்படி வரவு வைக்கப்படும் தொகையானது ஒவ்வொரு மாதமும் புத்தக சரிகட்டல் மூலம் சரி செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பப்படுவதால் சார்நிலை கருவூலத்திலும் கணக்கு இருப்பு வைக்கப்படுவதில்லை. இதனால் வருமான வரித்துறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட வரித் தொகையினை அறிய முடியாததால் ஆசிரியர்களுக்கு கடந்த காலங்களில் வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் பல ஆசிரியர்கள மனக்குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்தி வெளியீடு (30.3.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக