பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/07/2015

சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள் (4.7.2015)

தலைமை: ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டத் தலைவர்
1.    திருப்புவனம் வட்டாரத்தலைவர் திரு.ஜான் கென்னடி அவர்களின் தந்தை திரு.சீனியப்பன், வட்டாரப் பொருளாளர் திரு.வேதக்கண்ணு அவர்களின் தந்தை திரு.சாமிதாஸ், மாவட்டத் துணைத் தலைவர் திரு.சூசைராஜ் அவர்களின் சகோதரர் திரு.ஆச்சரியம், சிவகங்கை ஒன்றிய ஓய்வறியா உறுப்பினர் திருமதி.புனிதா ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு  மௌன அஞ்சலி செலுத்துகிறது.
2.    மாவட்டப் பொருளாளரால் படைக்கப்பட்ட 10.11.2014 முதல் 30.06.2015 வரை உள்ள வரவு செலவுகளை இம்மாவட்டச் செயற்குழு ஏகமனதாக ஏற்பு செய்கிறது.
3.    இயக்கத்தின் வங்கி கணக்கை புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் ஆகியோருக்கு மாற்றம் செய்திட இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
4.    இளையான்குடி வட்டாரக் கூட்டத்தினை மாவட்டத் துணைச் செயலாளர் திரு.இராஜகோபால் அவர்களும், சாக்கோட்டை வட்டாரக் கூட்டத்தினை மாவட்டத் துணைத் தலைவர் திரு.சூசைராஜ் அவர்களும் சம்பந்தப்பட்ட வட்டார நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் கூட்டுவதற்கும், அக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவும் இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
5.    ஜூன்-10 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட களப்பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.
6.    மாவட்டத் தணிக்கை முடிப்பதற்கு ஏதுவாக அனைத்து வட்டாரங்களும் 2014-15ம் ஆண்டிற்கான வரவு-செலவுகளை வட்டாரச் செயற்குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தி வரும் ஜூலை-23க்குள் தங்கள் கிளையின் தணிக்கையினை நிறைவு செய்து முடிக்க இச்செயற்குழு முடிவாற்றுகிறது.
7.    இயக்க இதழ் சந்தாதாரர்களை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை முடுக்கி விட வட்டார நிர்வாகிகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
8.    2015-16ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து ஆகஸ்ட்-30ஃ2015க்குள் பட்டியலுடன் உரிய பங்கு தொகையையும் செலுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
9.    ளுளுயு நடுநிலைப்பள்ளிகளைப் போல் ளுளுயு அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கும் தலா மூன்று பட்டதாரி ஆசிரியர் பணியி;டங்களை உருவாக்கி ஆசிரியர்களை பதவி உயர்வில் நியமிக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
10.    1997 முதல் 1999 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
11.    உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்கிட தொடக்கக்கல்வி இயக்குனர் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் இதை மாநில மையம் வலியுறுத்த வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
12.    பி.லிட்., பட்டம் பெற்று நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி வகிக்கும் ஆசிரியர்களுக்கு பி;எட்., பயின்றமைக்கு  ஒரு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்.
13.    61 மாணவர்கள் இருந்தால் மூன்று ஆசிரியர் என்பதை மாற்றி கல்வி சூழல் சிறப்பாக அமைய 46 மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர் என மாற்றியமைத்திட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
14.    தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கை விடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் செப்டம்பர்-2ஃ2015ல் நடத்தும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்படுகிறது.
------------உண்மை நகல்------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக