பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/12/2015

உயர்கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

உயர்கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட வேண்டுமென மத்திய அரசுக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
 தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
 டிச.15 முதல் டிச.18 வரை கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற உள்ள உலக வர்த்தக மாநாட்டில் உயர்கல்வி தொடர்பான சாசனத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் 160 நாடுகள் உயர் கல்வியை இந்தியாவுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் உயர்கல்வியை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் 8.14 சதவிகிதம் பேர் மட்டுமே உயர் கல்வி பெற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம் கொண்டு வந்தால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியர்களுக்கு என்ன கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை அந்நிய நாட்டு நிறுவனங்களே முடிவு செய்யும். கல்விக்கு அரசு அளிக்கும் மானியம் முற்றிலும் நிறுத்தப்படும். எனவே இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது. இதை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் பொதுமக்களுடன் இணைந்து விரைவில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உயர் கல்வியை வணிக மயமாக்குவதை கைவிட வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக