பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/25/2015

உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும்&அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.
தகவல் : ஏங்கெல்ஸ், திண்டுக்கல்

தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள்
தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை
சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். 
இச்சந்திப்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ்,
மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர்,
மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம்,
துணைப் பொதுச் செயலாளர் திரு.மயில்,
STFI பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன் ,
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் மாத்யூ,மற்றும்
விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
1. கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் துய்க்கக்கூடிய ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு பிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒரு சில தினங்களில் விளக்கத்துடன் கூடிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
2. அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியடங்களை அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயே நிரவல் செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கையை கனிவுடன் ஏற்றுக்கொண்டார்.
3. தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் தேவைப்படும் பணியிடங்களை (Need Post) நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுத்த பின்புதான் உபரி பணியிடங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக அலசப்பட்டது. நமது தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
4. இரண்டு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கென தனியாக துப்புரவு பணியாளர் நியமிக்கப்படும் எனவும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
5. திருநெல்வேலி மாவட்டம் - நாங்குநேரி ,
நாமக்கல் மாவட்டம் - பள்ளிபாளையம்,
விழுப்புரம் மாவட்டம் - வல்லம்,
கோயம்பத்தூர் மாவட்டம - கொண்டாமுத்தூர்
மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம்
ஆகிய ஒன்றியங்களில் உள்ள
ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை
இணை இயக்குநர்(நிர்வாகம்) திருமதி.லதா அவர்கள் தலையிட்டு சரி செய்யப்படும் என உறுதியளிக்கட்டது.
6. சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம் ஒன்றியம் - பழையூர் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்க்கு ஒத்துழைப்பு நல்காமல், நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மீதான குறிப்பானையை நடைமுறைப்படுத்த உடனடியாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்க்கு அலைபேசி வழியாக இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
7. ஆசிரியர் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்
புதுக்கோட்டை மாவட்;டம் - விராலிமலை மற்றும் பொன்னமரவாதி,
திருவண்ணாமலை - ஆரணி,
திருவாரூர் - திருவிளங்காடு,
திருநெல்வேலி - ஏசு அடியான் ஆகிய உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீதும்,
நாங்குநேரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் - காங்கோய வட்டார உதவித் தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநருடன் பேசப்பட்டது. அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்கள்.

6/23/2015

TNPTF அறிக்கை - தினமணி செய்தி வெளியீடு 22.6.2015

 சிவகங்கை மாவட்டத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கணினிமயமாக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் 12 ஒன்றியங்களில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 22 அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கென 3 அலுவலர்கள் என 25 உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணியினை மேற்பார்வையிடுவது, சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற்று வழங்கவும், மாணவர்களின் கல்வித் தரத்தை ஆராய்பவர்களாகவும் செயல்படுகின்றனர்.
கல்வித் துறையில் அனைத்து கடிதப் போக்குவரத்தும் மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமே நடைபெறுகிறது. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாத ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் அனைத்தும், இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்து வழங்கப்படுகிறது.
இதற்கு, அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கருவூலத் துறை சார்பில் முறையான பயிற்சி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இணையதள வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை.
இதனால், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இணையதள வழி ஊதிய பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தனியார் கணினி மையத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியது: தனியார் கணினி மையங்களுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்குத் தேவையான செலவினத் தொகையை, சில அலுவலர்கள் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்து சரிக் கட்டுகின்றனர்.
அலுவலர்களுக்கு கணினி பயிற்சியளிக்கவும், இணையதள வசதி உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார்.

6/12/2015

10.6.2015 TNPTF ஆர்ப்பாட்டம் - சிங்கம்புணரி வட்டாரம் - தினமலர் செய்தி வெளியீடு


10.6.2015 TNPTF ஆர்ப்பாட்டம் - சிவகங்கை வட்டாரம் - தினகரன் செய்தி வெளியீடு



10.6.2015 TNPTF ஆர்ப்பாட்டம்





ஊழியர்களை ஏமாற்றும் மோசடி ஓய்வூதியத் திட்டம்


6/05/2015

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 10 இல் ஆர்ப்பாட்டம்

சிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து ஜூன் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
 தமிழக அரசு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்துக்கு இடம் பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பள்ளி திறந்த பின்னர் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியேற்பதில் சிரமங்களுக்கு ஆளாகி தவித்தனர்.
 இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்கி விட்ட நிலையில் இதுவரை காலிப்பணியிட விவரம், முன்னுரிமை பட்டியல் ஆகியவை வெளியிடப்பட வில்லை. அத்துடன் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான எவ்வித அறிவிப்பும் கல்வித் துறையால் வெளியிடப்பட வில்லை.
  இது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை கண்டித்து ஜூன் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Dinamani 5.6.15

6/04/2015

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.



1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.
மாணவர் வருகைப் பதிவேடு
3.
மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.
சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.
பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.
அளவைப் பதிவேடு
7.
நிறுவனப்பதிவேடு
8.
பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.
தணிக்கைப் பதிவேடு
10.
பார்வையாளர் பதிவேடு
11.
பள்ளி விவரப் பதிவேடு (school profile)
12.
ஊதியப்பட்டியல் பதிவேடு
13.
ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.
மதிப்பெண் பதிவேடு
15.
தேக்கப் பட்டியல்
16.
வருகைப்பட்டியல்
17.
மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.
வரத்தவறியவர் பதிவேடு
19.
சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.
மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.
மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.
சுற்றறிக்கைப் பதிவேடு
23.
பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.
தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.
தற்செயல் விடுப்பு
26.
மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.
தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.
ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.
வாசிப்புத்திறன் பதிவேடு
30.
அஞ்சல் பதிவேடு
31.
தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.
அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.
கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire
விருது பதிவேடு
35.
கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.
பெற்றார் ஆசிரியர் கழகக்கூட்டப்பதிவேடு
37.
அன்னையர் குழு பதிவேடு
38.
பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.
மன்றப் பதிவேடுகள்
a.
தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.
கணித மன்றம்
c.
அறிவியல் மன்றம்
d.
செஞ்சிலுவைச் சங்கம்
e.
சுற்றுச்சூழல் மன்றம்
40.
கால அட்டவணை
41.
வகுப்பு வாரியான
பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.
சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.
பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.
பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.
பள்ளி சுகாதாரக்குழு பதிவேடு (school health club )
46.S.S.A
பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A
வரவு செலவுப் பதிவேடு
48.
வங்கி கணக்குப் புத்தகம்
49.
பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு       
    இரசீது பதிவேடு
50.E.E.R
பதிவேடு
51.S.S.A
பார்வையாளர் பதிவேடு
52.
நலத்திட்டப் பதிவேடுகள்
1.
விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.
விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.
விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.
விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.
மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.
விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.
விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.
விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.
விலையில்லா கணித உபகரணப்   பெட்டி வழங்கிய பதிவேடு
10.
விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.
வருவாய் ஈட்டும் தாய்
தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை
பதிவேடு

குறுவளமைய பயிற்சி விபரம் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிட மாற்றம் - அரசு ஏற்பு


பணி சிறக்க வாழ்த்துகிறோம்

சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலராக(பொறுப்பு) பணியேற்றுள்ள திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு.அப்துல் ரஹீம் அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது.

மாபெரும் ஆர்ப்பாட்டம்