பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2/20/2013

பொதுச்செயலாளர் தொலைபேசி உரையாடல்

அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் மிகப்பெரிய வெற்றி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு. மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர் பயற்சி பள்ளி மாணவிகளை வைத்து பள்ளிகளை செயல்படுத்தினர் வாழ்த்துக்கள்.

2/13/2013

Have PAN and taxable income, no return filed ? Beware, Taxmen are watching !

Government Once again urges all Tax Payers to Disclose their true income and pay Appropriate Taxes within the Current Financial Year; Nodal Cell set up to Capture the Response and take Follow-up Action; an Online Monitoring System to Ensure Follow-up Action and Track Return Filing and Tax Payment of the Target Segment  The Union Finance Minister Shri P. Chidambaram has repeatedly emphasized that there is need for a non–intrusive tax administration to enable the tax payer to file his return and pay appropriate taxes.

In the statement made by the Revenue Secretary to the media on 10th December 2012, he had stated that there is no advantage in suppressing the true income or avoiding paying income tax that is due because, sooner or later, the information available with the Income Tax Department will lead the department to the doors of such persons.

The Directorate of Systems of the Income Tax Department has undertaken a business intelligence project to identify PAN holders who have not filed Income Tax Return and about whom specific information is available in 148 information codes of Annual Information Return (AIR), Central Information Branch (CIB) data and TDS/TCS Returns. Information in the Cash Transaction Reports (CTRs) of FIU-IND has also been included as part of this data matching exercise. This data analysis has identified target segment of 12,19,832 non-filers linked to more than 4.7 crore information records. Rule based algorithms have been used to identify high priority cases for follow-up and monitoring.

In the first batch, letters are being sent to 35,170 PAN holders by the Directorate of Intelligence and Criminal Investigation. The letter contains the summary of the information of financial transaction(s) along with a customized response sheet and seeks to know whether the person had filed his Income Tax return or not. A Nodal cell has been set up to capture the response and take follow-up action. There will be an online monitoring system to ensure follow-up action and track return filing and tax payment of the target segment.

The Government would once again urge all tax payers to disclose their true income and pay appropriate taxes within the current financial year.
Source : PIB

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி: கல்வியாளர்கள் கோரிக்கை

சென்னை: "தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கடந்த, 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி சட்ட விதிகளை அமல்படுத்துவதை கண்காணித்து, மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்த
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இதில் கல்வியாளர்கள் கூறியதாவது:
ராஜகோபால் - கல்வியாளர்: தமிழகத்தில், கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறதா என்பதை, அனைவரும் ஒன்று சேர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டத்தின் படி, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தனிக்குழு அமைக்க வேண்டும்.
அவ்வாறு குழந்தை கல்வியின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால், எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள், பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அறிய முடியும். அரசும், எந்தெந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிந்து, வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
வசந்திதேவி - முன்னாள் துணைவேந்தர்: கிராமபுறங்களில், தனியார் பள்ளிகள் அதிகரிப்பதற்கு, சாதிப்பூசல்கள் அடிப்படை காரணம். சமீபத்தில், பரமக்குடி பகுதியில் ஆய்வு செய்த போது, அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
அங்குள்ள பெற்றோர்கள், அரசுப் பள்ளிகள் அருகில் இருக்கும் போது, பல கி.மீ., தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்ந்தனர்.அது குறித்து, அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ஆதிதிராவிட மாணவர்களே அதிக அளவில், அரசுப் பள்ளிகளில் படிப்பதால், தங்கள் குழந்தைகள் அவர்களுடன் சேர கூடாது என்பதற்காக, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்தவுடன், நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.
நாராயணன் - ஆசிரியர், பாடம் இதழ்: தமிழகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாததாலும், காப்பாளர்கள் சரி வர செயல்படாததாலும், அங்கு சேரும் குழந்தைகள் மேலும், குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

G.O

பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்

வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.
 
 

இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது: வரும் 20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2/05/2013

பிளஸ் 2 செய்முறை தேர்வு: மின்தடையால் தவிக்கும் மாணவர்கள்

திண்டுக்கல்: தொடரும் மின்தடையால், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள், மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக அறிவியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு, பிப்., 1ல் துவங்கி உள்ளது.
இந்த ஆண்டும், மாணவர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும், 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மின்தடை உள்ளது. இதனால் பிளஸ் 2 மாணவர்கள் முழுமையாக தேர்வில் கவனம் செலுத்த முடியாது.
கடந்த ஆண்டு, எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு, ஜெனரேட்டர் பயன்படுத்தி கொள்ள, அரசு அனுமதி அளித்தது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம். எனவே, செய்முறை தேர்வு நடக்கும் மையங்களிலும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இத்குறித்து பிளஸ் 2 மாணவர்கள் கூறுகையில், "மின்தடையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், செய்முறை தேர்வு நடக்கும் மையங்களுக்கும், எழுத்து தேர்வுக்கும், கடந்த ஆண்டை போல், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும்" என்றனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "மின்தடையால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடந்த மையங்களில், ஜெனரேட்டர் பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டது. அரசு பள்ளிக்கு 45 ஆயிரம் ரூபாய், உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 ஆயிரமும் வழங்கப்படும்" என, அரசு அறிவித்தது.
அரசு பள்ளிகளுக்கு இத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. அரசு உதவி பெறும் பல பள்ளிகளுக்கு, இத்தொகை கிடைக்கவில்லை. இக்குறையை போக்கி, இந்த ஆண்டும், செய்முறை தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என்றனர்.

B.ed., Dec 2012 Result