பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

4/27/2015

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை விடுமுறையில் நடத்த கோரிக்கை

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கல்வித் துறை மெüனமாக உள்ளது. இதனால் வெளி மாவட்டம் மற்றும் ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக ஆசிரியர்களிடம் மனுவை பெற்று காலிப் பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மே மாத விடுமுறையிலேயே கலந்தாய்வை நடத்தவும், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கிட வேண்டும் என்றார்.

தினகரன் செய்தி வெளியீடு


4/13/2015

சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை நசுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


சத்துணவு பணியை ஏற்று நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்  தோழர் பாலச்சந்தர் அவர்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சத்துணவு பொறுப்பினை தலைமையாசிரியர்கள் ஏற்கக்கூடாது எனவும், கட்டாயப்படுத்தும் அலுவலர்களிடம் தங்களுடைய ஜனநாயக எதிர்ப்பினை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சத்துணவு ஊழியர் சங்கம் மேற்கொள்ளும் இந்த அறப்போராட்டம் வெல்வதற்கு சுவரொட்டிகளை இயக்கம் சார்பாக அச்சிட்டு ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே சிவகங்கை மாவட்டம் முழுமைக்கும் இந்த அறிவிப்பு குறுந்தகவல்களாக அதிகாலையிலேயே அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் இதனையே அறிவிப்பாக ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்

4/06/2015

சிவகங்கை மாவட்டச் செயற்குழு முடிவுகள்


சிவகங்கை மகளிர் தினக்கரத்தரங்கம் - தினமணி (6.5.15) செய்தி வெளியீடு

பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது

பெண் அரசு ஊழியர்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது என சிவகங்கையில் நடந்த மகளிர் தின கருத்தரங்கில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஜீவரெத்தினம் தலைமை வகித்தார். துணைச் செயலர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர் இளநங்கை வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மலர்விழி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் நீலா, தமிழ்த்துறை பேராசிரியர் மனோன்மணி ஆகியோர் பேசினர்.
இதில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பணி புரியும் பெண்களை விடுமுறை தினத்தில் அலுவலகம் வர கட்டாயப்படுத்தக் கூடாது. பெண்கள், மாணவிகள் சென்று வரும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் மகளிர் சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பெண்கள் பணி புரியும் இடங்களில் குறை கேட்பு மையம், போதிய கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார துணைச் செயலர் மாலா நன்றி கூறினார்.

4/05/2015

சிவகங்கை மகளிர் தினக்கருத்தரங்கம் - தீக்கதிர் (5.4.15) செய்தி வெளியீடு


சிவகங்கை மகளிர் தினக்கருத்தரங்கம் - முடிவாற்றப்பட்ட தீர்மானங்கள்


சிவகங்கை மகளிர் தினக்கருத்தரங்கம் - தினமலர் (5.4.2015) செய்தி வெளியீடு



சிவகங்கை மகளிர் தினக்கருத்தரங்கம் - தினத்தந்தி (5.4.2015) செய்தி வெளியீடு



சிவகங்கை மகளிர் தினக்கருத்தரங்கம் - தினகரன் (5.4.2015) செய்தி வெளியீடு



4/02/2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு சார்பான ஆணை போலி என மத்திய அரசு அறிவிப்பு

Finance Ministry's clarification on Fake Dearness Allowance Order - Revised rates effective from 01.01.2015

No.1/2/2014-E.II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure

North Block, New Delhi.
Dated the 1st April. 2015.

OFFICE MEMORANDUM

Subject:- Payment of Dearness Allowance to Central Government Employees - Revised Rates effective from 01.01.2015 - Fake Order/Instructions - Clarification regarding.


It has come to the notice of the Department of Expenditure, Ministry of Finance that Office Memorandum bearing F. No. 1/2/2015-E.II(B) dated 3oth March, 2015 under the signature of Shri A. Bhattacharya, Under Secretary, Department of Expenditure, regarding Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 01.01.2015, is being circulated amongst Government Departments/Offices.

2. It is clarified that the OM. dated 30.03.2015, purportedly issued by the Ministry of Finance, is a fake and that no such instructions have been issued by the Department of Expenditure, Ministry of Finance. Accordingly, all Ministries/Departments and Central Government offices are hereby advised not to take cognisance of these fake instructions being circulated in Government offices.

(Subhash Chand)
Director