பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/27/2016

துயில் மறப்போம்... துயர் துடைப்போம்....

தோழமையே...
நமது பேரியக்கத்தின் 6வது மாநில மநாடு பணி ஒருபுறம், ஜேக்டோ மாவட்ட மறியல் மறுபுறம் என உனது ஓய்வறியா பணியினை நானறிவேன். இருந்தாலும் கூட இன்றைய நிலையில் மாநில மாநடு பணிக்கு சற்று ஓய்வு கொடு. எதிர்கால ஆசிரியர் சமுதாயத்தை இன்னல்களிலிருந்து மீட்டெடுக்க உனது வேண்டுகோளுக்கிணங்க கட்டமைக்கப்பட்ட ஜேக்டோ மாவட்ட மறியல் வருகிற ஜனவரி 30, 31, பிப்ரவரி 1 ஆகிய தினங்களில் மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளதால் மறியலில் நமது அமைப்பிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக பங்கெடுக்க மாநில மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில மையத்தின் முடிவினை சிரமேற்கெண்டு செயலாற்றும் உனது ஆர்வத்தை நானறிவேன். இருந்தாலும் உன்னை உசுப்பேற்ற வேண்டிய கடமை எனக்குள்ளது. மற்ற இயக்கங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் களப்பணியாற்றி நமது இயக்கத்தின் 60,000த்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களை முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்யவும். அதுவரை துயில் மறப்பபோம் ஆசிரியர் தோழர்களின் துயர் துடைப்போம்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மவாட்டம்

1/22/2016

6வது மாநில மாநாடு



இனிய தோழமைகளே!!!

இனிய தோழமைகளே!!!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 6வது மாநில மாநாடு நடக்கும் கோவில்பட்டி நகர் முழுவதும் மாநாடு கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்களின்
பொது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாக கருத்து சித்திரத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் வைக்க மாநாடு விளம்பரக்குழு முடிவாற்றியுள்ளது. 100க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்க உள்ளதால் அப்பதாகைகளில் இடம் பெற வேண்டிய வாசகங்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன். இரண்டு வரிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
எ.கா:
1. வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்கிடு
2 ஆசிரியர்களின் எதிர்'கால வாழ்வை கேள்விக்குறியாக்கிய தன்பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிடு
3. கல்வியை வணிகமயமாக்குவதை கைவிடு
4. காவிமயமான கல்விக்கொள்கையை கைவிடு
5. புற்றீசல் போல் பெருகும் சுயநிதி பள்ளிகளை கட்டுபடுத்தி அரசு பள்ளிகளை மீட்டெடு மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் போல் தங்கள் நடையில் எழுதி எனது மின்னஞ்சல் முகவரிக்கு (Email: tnptfmuthupandian@gmail.com  (or)
tnptfsvga@gmail.com ) அனுப்புமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்...
ஆ.முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்டச் செயலாளர்
மாநாடு விளம்பரக்குழு உறுப்பினர்

1/21/2016

6வது மாநில மாநாடு விளம்பரக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு விளம்பரக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் திரு.மோசஸ் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்தது. மாநிலத் துணைப்பொதுச் செயலாளரும், விளம்பரக்குழு தலைவருமான திரு.மயில் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன்., தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு.செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.ரவீந்திரராஜன், திரு.சுரேஷ், கருங்குளம் வட்டாரத் தலைவர் திரு.லூயிஸ் பி.ராயன், விளாத்திக்குளம் வட்டாரப் பொருளாளர் திரு.இப்ராஹீம், ஸ்ரீவைகுண்டம் வட்டாரப் பொருளாளர் திரு.தாம்சன் ஆகியோர் பங்குபெற்று தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்குழு மீண்டும் வருகிற 3.2.2016 அன்று கோவில்பட்டியில் கூடுகிறது.

1/19/2016

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு - திருச்சி (18.1.2016)

1. சென்சஸ் கணக்கெடுப்பு பணி ஆசிரியர்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து மாநில அமைப்பின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு.
2. மாநில மாநாட்டில் சமூக ஆர்வலர்களான எழுத்தாளர் சமஸ் மற்றும் நடிகை ரோகினி பங்கேற்க செய்ய முடிவு. மேலும் முத்துசுந்தரம் மற்றும் துரைபாண்டியன் ஆகியோரின் உரை வீச்சு. இவர்களுடன் திருவாளர்கள் கண்ணன்இ ராஜேந்திரன்இ சவுந்திரராஜன்இ சுகுமாறன்இ தமிழ்ச்செல்விஇ இசக்கியப்பன்இ உச்சிமாகாளிஇ வத்சலாஇ சுரேஷ்இ சுப்புராஜ்இ பாலசுப்பிரமணியன்இ கணேசன்இ அருணன் ஆகியோருடன் தொழிற்சங்க தோழர்கள்இ அண்டை மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பு.
3. மாநாட்டு தீர்மானங்கள் ஏதுமிருப்பின் திரு.மயில் துணைப்பொதுச்செயலாளர் மற்றும் மாநாடு தீர்மானக்குழு தலைவர் என தலைப்பிட்டு தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் திரு.செல்வராஜ் முகவரிக்கு 25.1.2016க்குள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4. மாநாடு நிதி பங்கீட்டை உடனடியாக செலுத்த முடிவாற்றப்பட்டது

சென்சஸ் பணிக்கு எதிர்ப்பு - தினகரன் செய்தி வெளியீடு


சென்சஸ் பணிக்கு எதிர்ப்பு - தினமலர் செய்தி வெளியீடு


தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்குச் சான்று அளிக்கப்பட்டு விட்டதா என்ற விவரங்கள் அனுப்ப உத்தரவு


1/10/2016

ஆசிரியருக்கு பாதுகாப்பு கோரிக்கை இன்றைய தினகரனில் 10.1.2016


ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

First Published : 09 January 2016 04:28 AM IST
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

1/08/2016

அரசு கல்லூரி போராசிரியர் மீது தாக்குதல். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்.


தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.பி.சிவராமன் அவர்கள் மீது சிலர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
கடந்த சில காலங்களாகவே ஆசிரியர் சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. வகுப்பறைக்குள்ளே ஆசிரியர்கள் கொலை செய்யபடுவதிலிருந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கல்வி வணிக பொருளாக்கப்பட்டு கல்வியின் மகத்துவத்தை சின்னபின்னமாக்கிய  அரசுகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இலாப வேட்கை கொண்ட கார்ப்பரேட்டுகள் கல்வி நிறுவனங்களை தங்களின் மூலதனம் பெருகுவதை இலக்காக கொண்டதன் விளைவு, இந்த நாட்டின் எதிர்காலமாக திகழ வேண்டிய மாணவர் சமுதாயம் மாயை உலகின் பின்னால் சென்று சீரழிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆசிரியர் சமுதாயம் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 
இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் பேராசியர் சிவராமன் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் சில சமூக விரோதிகளால் கண் மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை தமிழ்நாடு காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்ட ரீதியான தண்டனை பெற்றுத் தர வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 
மேலும் ஆசிரியர் சமுதாயம் அச்ச உணர்வின்றி பாதுகாப்பாக பணியாற்ற உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


3.1.2016 கோவில்பட்டி மாநிலச் செயற்குழு முடிவுகள்


பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க TNPTF கோரிக்கை. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியீடு(8.1.2016)


சிவகங்கை மாவட்டத்தில் 6வது மாநில மாநாடு சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள்.

தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத்தில் மாநில மாநாடு சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறி வருகின்றன.
27.12.15 - மாவட்ட பொதுக்குழு கூட்டம் நிறைவு. மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மயில் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜோசப் ரோஸ் பங்கேற்பு. முதல் கட்ட மாநாடு நிதி அளிப்பு
3.1.2016 - தோவோட்டை வட்டாரம் நிறைவு. மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் பங்கேற்பு
3.1.2106 - சாக்கோட்டை வட்டாரம் நிறைவு. மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் பங்கேற்பு
3.1.2016 - சிவகங்கை வட்டாரம் நிறைவு. மாநிலத் துணைத் தலைவர் திருமதி.மல்லிகா மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் பங்கேற்பு
9.1.2016 - காளையார் கோயில் வட்டாரம். மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மயில் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜோசப் ரோஸ் பங்கேற்பு. இரண்டாம் கட்ட மாநாடு நிதி ரூ 1 லட்சம் அளிக்க முடிவு. உடன் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
10.1.2016 - கல்லல் வட்டாரம் - மாவட்டச்செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் பங்கேற்பு.
11.1.2016 - திருப்பத்தூர் வட்டாரம் - மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.புரட்சித்தம்பி பங்கேற்பு.
11.1.2016 - மானாமதுரை வட்டாரம். மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.குமரேசன் பங்கேற்பு.
12.1.2016 - எஸ்.புதூர் வட்டாரம். மாவட்டச் செயலாளர் திரு.முத்துப்பாண்டியன் பங்கேற்பு.
மற்ற வட்டாரங்கள் தங்கள் பொதுக்குழு தேதியினை முடிவு செய்து மாவட்டச் செயலாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற கேட்டுக்கொள்கிறேன்.
18.1.2016 - திருச்சியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மூன்றாம் கட்ட மாநாடு நிதியாக ரூ 1லட்சம் கொடுக்க ஏற்பாடு.
மாநில மாநாட்டில் குடும்பத்துடன் பங்கெடுப்போம். உரிமைக்காக குரல் கொடுப்போம்.
தோழமையுடன்..
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.

1/07/2016

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை


மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்களுடன் மாநில நிர்வாகிகள் இன்று (7.1.16) சந்திப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.ச.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.ச.மயில் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்பொழுது ஊராட்சி ஒன்றி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே துப்புரவு பணியாளர்கள் நியமிக்க உத்தரவு உள்ளதாகவும் மற்ற நகர, மாநகராட்சி பள்ளிகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்பதை எடுத்துரைத்தார்கள். எனவே அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த கேட்டுக்கொண்டார்கள். மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.


மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்களுடன் TNPTF மாநில நிர்வாகிகள் இன்று (7.1.16) சந்திப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிப்பதில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.ச.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் திரு.ச.மயில் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அப்பொழுது பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமிப்பதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபட்ட நடைமுறைகளை பின்பற்றுவதால் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறைகளை பின்பற்ற சரியான வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.