பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/25/2017

தோழமைகளே!!!

தோழமைகளே!!!
நாளை(26.3.2017) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மாவட்டம் முழுமைக்கும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வட்டாரச் செயலாளர்கள் தங்கள் வட்டார ஆசிரியர்களை குறித்த நேரத்தில் பங்கெடுக்க உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இயங்குவதும், இயக்குவதும் நாம் என்பதில் பெருமை கொள்வோம். பெண் ஆசிரியர் கருத்தரங்கில் பெண் ஆசிரியர்கள் தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களை முன் வைக்க கேட்டுக்கொள்ப்படுகிறார்கள். ஆசிரியர் நலன், மாணவர் நலன், சமூக நலன் என்ற இயக்கத்தின் தாரக மந்திரத்தை முன்னெடுத்த செல்ல, வருங்காலத்தில் பெண் ஆசிரியர்கள் தலைமையேற்று இயக்கத்தை வழி நடத்திச்செல்ல, போராட்ட உணர்வு குறையாமல் உரிமைகளை பெற்றிட, எதிர்கால இந்த்யாவின் நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் புனிதமான பணியினை மேற்கொள்ளும் நாம் ஒரு சுய ஆய்வு மேற்கொண்டு பணிக்கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க ஒன்று கூடுவோம் தோழமைகளே...
தொடர்ந்து கடுமையான பணிச்சூழலிலும் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கி சமூக நலன் சார்ந்து சிந்திக்க நாளை சங்கமிப்போம்...
தொடர்ந்து இயக்க பணியில்
MP@TNPTF
சிவகங்கை மாவட்டம்


3/21/2017

சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.

சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல்.
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் மாவட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தலைமையாசிரியர்கள் சத்தணவு வழங்கும் பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு தரமான சத்துணவை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் மு.குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். பல்வேறு சத்துணவு மையங்கள் ஊழியர் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்கு ஆட்பட்டு வருகிறது. அவர்களது நியாயத்தை உணர்ந்து சங்க பொறுப்பாளர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட்டத்தை நசுக்கும் விதமாக சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடு வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் சத்துணவு பணிகளை ஏற்க மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். எனவே உடனடியாக  சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு கான வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

3/19/2017

Dinakaran


Malaimurasu


நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். இதுவரை அந்த குழு எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட பின், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த, மாநில அரசின் எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 2017 ஜூன் 30-க்குள் அளிக்க உத்தரவிட்டார். ஆனால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிடவும், நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக முதல்வர் பழனிசாமி முன் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.