பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/25/2011

மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் உள்ளதா?

சு.லட்சுமணன், (மாவட்ட கல்வி அலுவலர், பணி ஓய்வு), பீர்க்கன்காரணை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வியை, 2011-12ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, அனைத்து பள்ளிகளுக்கும், சமச்சீர் கல்வி பாட நூல்களை வழங்கி விட்டது. மெட்ரிக் பள்ளிகள், பாடத் திட்டத்தின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட பதிப்பகத்தார்களிடம் பாட நூல்களை பெற்றுக் கொள்ளவும் நீதிமன்றம் வழி செய்தது. அதை பின்பற்றி, விலையே குறிப்பிடாத பாட நூல்களை (தமிழ்ப் பாட நூல் தவிர்த்து) அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் வாங்கி, மாணவர்களுக்கு வழங்கி, பாடங்களை நடத்துகின்றன.ஆயினும், எந்தவொரு மெட்ரிக் பள்ளியும், தமிழ்ப் பாட நூல்களை வாங்கவில்லை. தனியார் பதிப்பகங்கள், தமிழ்ப் பாட நூல்களை அச்சிடவில்லை. எனவே, தமிழ்ப் பாட நூல்களை, தமிழ்நாடு பாட நூல் கழகத்திலேயே வாங்க வேண்டும். அங்கு, பாட நூல்கள் தொகுதியாகவே (அனைத்து பாட நூல்களும்) கிடைக்கும். தனியாக தமிழ் நூல் மட்டும் பெற இயலாது.இந்நிலையில், தொகுதியாக நூல்களை வாங்க மறுத்ததால், தமிழ் நூல்களை விலை கொடுத்து வாங்க இயலவில்லை. தொகுதியாக வாங்கவும் மனமில்லை. இதனால், மெட்ரிக் பள்ளிகளில், "தமிழ்ப் பாடம்' நடத்தப் பெறவில்லை.தமிழகத்தில், மெட்ரிக் பள்ளிகளில், தமிழ்ப் பாடம் நடக்கவில்லை என்பதை கல்வித்துறை நன்கறியும். தற்போது நடந்துவரும் காலாண்டுத் தேர்வில், தமிழில் எந்த கேள்விக்கு, எந்த பதிலை மாணவர்கள் எழுதியிருப்பர் என்பது, தற்போதைய நிலையில், கடவுளுக்கே வெளிச்சம்!
மாணாக்கர்கள் தமிழ் மொழியின் பல் வளங்களை எப்படி அறிவர்; எப்படி பயில்வர்? "மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற பாரதியாரின் பாடல் மெய்யாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. கல்வித்துறையும், தமிழக அரசும் கருத்தூன்றி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கற்றுத்தர ஆவன செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக