பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
பத்திரிக்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிக்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/02/2017

Dinamani


பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம். ஊதியமில்லாததால் பணியாளர்கள் அதிர்ச்சி. உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.


        சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துப்புரவு பணிக்கு அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஊரக வளர்ச்சி துறையின் மூலம், பள்ளி மேலண்மை குழுவின் (School Management Committee) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பின் தலைமையாசிரியர்கள் அந்த ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (Panchayat level Federation)  மூலம் சம்பந்;தப்பட்ட ஊழியர்களின் வங்கி கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில் ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சிதம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ் ஆகியோர் கூட்டாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
.
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக தமிழக அரசு கடந்த ஜனவரி-2016 முதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீடு செய்து அரசு செயல்படுத்தி வருகிறது. 
  ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் இணைந்து கூட்டாக வங்கியில் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.  துப்புரவு நிதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்பின் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுவை கூட்டி உரிய தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் வங்கிக்கு சென்று கூட்டாக பணம் எடுக்க வேண்டும். எடுத்த பணத்தில் துப்புரவு பொருட்களுக்கு உரிய தொகையை மட்டும் தலைமையாசிரியர்கள் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியரின் ஊதியத்தை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் (PLF) வங்கி கணக்கில் நேரடியாக சென்று செலுத்த வேண்டும். அதன் பின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். 
ஆனால் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நிதியில்லை என கை விரிக்கின்றனர். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி ஊதியம் வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

3/19/2017

Dinakaran


Malaimurasu


நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். இதுவரை அந்த குழு எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட பின், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த, மாநில அரசின் எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 2017 ஜூன் 30-க்குள் அளிக்க உத்தரவிட்டார். ஆனால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிடவும், நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக முதல்வர் பழனிசாமி முன் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4/06/2016

நமது கோரிக்கை இன்றைய தினமணியில் - 6.4.2016

வாக்களிப்பு உறுதி மொழிப் படிவங்களை பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கக் கோரிக்கை

  • வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையிலான உறுதிமொழிப் படிவங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேர்தலில் வாக்களிக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்குவதற்கு உறுதிமொழிப்படிவங்களை பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்க ளாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடில்லாமல் வாக்களிப்போம் என்கின்ற உறுதிமொழியைப் பெறுவதற்காக இப்படிவங்களை வழங்கியுள்ளனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிவங்கள் வழங்காமல், பள்ளிக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 1,149 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 68 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு படிவத்தை நகலெடுத்துக்கொடுப்பதில் தலைமை யாசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மாவட்டத் தேர்தல் பிரிவு, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதிமொழி படிவங்களை அச்சடித்து வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நமது கோரிக்கை இன்றைய தினமலரில் - 6.4.2016