பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/30/2012

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும் போது தமது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை, அணிகலன்கள் அணிந்து வருமாறு உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது

பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

6/29/2012

TNPTF

பான் கார்டின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா!

நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.


ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.


பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.


முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.


“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.


5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.


அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.


பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?


ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.


எப்படி இதைப் பெறுவது?


வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.


உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற 
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.


இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.


1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.


1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

6/27/2012

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் (CPS) பிடித்தம் தொடர்பான விளக்கக் கடிதம் அரசு வெளியீடு

G.O.146

தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88 அன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிகளில் ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை வைக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுப் பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகள் முத்துலட்சுமி குற்றாலம் கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22.12.2003 அன்று மதிய உணவு இடைவேளையின் போது முத்துலட்சுமி பள்ளி அருகே தோழிகளுடன் சேர்ந்து ராட்டினம் ஆடினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் முத்துலட்சுமியின் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வலது கை அப்பறப்படுத்தப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிமலை வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகள் வலது கையை இழக்க பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம். எனவே அவளது எதிர்காலத்தை கருத்து கொண்டு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

வழக்கு விசாரணையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவு மூலம் சிறுமி வலது கையை இழந்துள்ளது தெரிய வருகின்றது. சிறுமியின் தந்தை அரசிடம் இழப்பீடு அளிக்க கோரிக்கை விடுத்தும் கிடைக்கவில்லை.

வழக்கின் தன்மை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சமும், அரசு ரூ.1.5 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டுத் தொகையை 2005ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் பல விபத்துகள், கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் பள்ளி வளாகம் அல்லது பள்ளியையொட்டிய பகுதியில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளையாட்டு பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் சுகாதாரத்தை கெடுக்கும் உணவுப் பொருட்களை பள்ளியின் அருகே விற்கக் கூடாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ONE YEAR DEGREE

TNPTF

  1. பொதுமாறுதல் இயக்குநர் செயல்முறைகள் 26.06.2012
  2. 193GOபட்டதாரி ஆசிரியர் தோற்றுவிப்பு அரசாணை
  3. பொதுமாறுதல் இயக்குநர் செயல்முறைகள்
  4. GO 15 நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தோற்றுவிப்பு அரசாணை
  5. 2012 - 13 பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதி மற்றும் கலந்தாய்வு நடத்தும் மையங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு
  6. இயக்குநர் சந்திப்பு(25.06.2012)

6/25/2012

Counseling

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?
- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க இருக்கிறது. அன்றைய தினம் சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பணியில் சேர இருப்பவர்களும், இந்த தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தகுதித் தேர்வு, வரும், ஜூலை 12ம் தேதி, 1,040 மையங்களில் நடக்கிறது. இதில் ஆசிரியர் பணியில் இருப்பவர்களும், பணிக்காக காத்திருப்பவர்களும் சேர்த்து, ஏறத்தாழ 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பொதுவாக போட்டித் தேர்வுகள் நடைபெறும். இந்த நாட்களில், மற்ற போட்டித் தேர்வுகள் நடைபெற இருப்பதால், வேறு வழியில்லாமல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் அதிகளவில் பங்கேற்க இருப்பதால், வசதியாக அன்று ஒருநாள், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அளித்து உத்தரவிட இருப்பதாக, நேற்று இரவு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு பதிலாக, வேறொரு நாளில் இந்த வேலை நாள் ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.
பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.
* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428
உயர்கல்வித் துறை
* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318

பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து உத்தரவு.

அரசு கடித எண். 20418 / ஈ 1 / 2012 - 1, நாள். 15.06.2012
ஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதாலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாலும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய செயலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அன்றைய தினம் தேர்வுகள் சிறப்பாக நடைபெற விடுமுறை அளிக்கப்படுகிறது.

6/24/2012

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்

திரு.தாஸ் அவர்கள், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர்.
பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை கண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.

6/16/2012

Three per cent quota in government service for the disabled is only for initial appointments not for Promotions-Madras High Court

Three per cent quota in government service for the disabled is only for initial appointments, and the government cannot be directed to extend it for promotions, ruled the Madras High Court on Monday.
Dismissing a petition seeking a direction to the government to reserve three per cent for promotions to physically handicapped persons, Justice K. Chandru said: “The provisions are contemplated only for initial appointments and not for promotions. The petitioner has not made out any case to seek a direction to provide for reservation for the disabled persons in the matter of promotions in respect of State services.”
The writ petition was filed by the South Arcot Vallalar District Handicapped Welfare Association, represented by its president S. Shanmugam, seeking reservation for the disabled in promotions. If suitable employees were not available in a particular year, the unfilled posts could be carried over for the next three succeeding years.
When the matter was heard, the State Commissioner for the Disabled stated that there was no government policy to reserve three per cent of posts in promotions to be filled from the disabled category.
The disabled persons were considered only for the direct recruitment posts under three per cent reservation as per a G.O issued in 1981. Promotions were made in government departments based on seniority or transfer of service.
Mr. Justice Chandru said it could be seen from the G.O. that reservation for disabled persons was only horizontal and not vertical as contemplated in Article 16 of the Constitution.
He said that even in respect of the Scheduled Castes and Scheduled Tribes, it was only by virtue of amendments made to the Constitution and by introduction of Article 16(4A) that the State had been empowered to make provision for reservation in promotion to any class or classes of posts in the service
source: The Hindu

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை போன்ற அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த இருப்பதாலும் மேற்கண்ட அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட விவரம் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்  அனைவரும் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தல் கூடாது எனவும் தலைமையிடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் முன்பு இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் செல்லக்கூடாது எனவும், CUG கைபேசியை எந்நேரமும் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...

முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...
கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.

தொலைபேசி எண்: 044-28594780

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.

இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012

விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm

இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012

விவரங்களுக்கு: www.momascholarship.gov.in

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும். போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012

உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012

மேலும் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in


மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.nhfdc.nci.in


அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.

மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.

விவரங்களுக்கு: www.inspire-dst.gov.in



புத்தக வங்கிகள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978

ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110

ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261

பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்

ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை மாணவர்ளுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது, அந்தப் பட்டியலில் புதிதாக, லேப்டாப், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கலர் பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் மற்றும் அட்லஸ் ஆகியவை சேர்ந்துள்ளன. காலணிகளும் தற்போது புதிய டிசைன் மற்றும் வண்ணங்களில் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பணியும் தனித்தனி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு, தொடக்க கல்வி இயக்குனரகத்திடமும், அட்லஸ் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகளும் நடைபெறுகின்றன.
விலையில்லா காலணிகள் 1 முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும், மொத்தம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவர்களுக்கு, காலணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.94 கோடியே 76 லட்சம்.
விலையில்லா காலணிகளைப் பொறுத்தவரை, இந்தமுறை ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒட்டுமொத்தமான ஒரு அளவில் தயாரித்து அனைவருக்கும் வழங்கி விடாமல், ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தனித்தனியே அளவெடுத்து, அதற்கேற்றபடி தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
லேசான பழுப்பு நிறம், அடர்த்தியான பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் காலணிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் கால் அளவுகள் எடுக்கப்பட்டு, மொத்தமாக, தொடக்கக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்படும். தமிழகம் முழுவதுமிருந்தும் வரும் அளவுகளை கணக்கிட்டு, அதற்கேற்ப காலணிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6/15/2012

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

6/13/2012

விலையில்லா நோட்டுகள் வழங்குவதில் தாமதம்: பெற்றோர்கள் கவலை

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகள் துவங்கி 12 நாட்களை கடந்த நிலையில் அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாடங்கள் நடத்தப்படுவதால் நோட்டுகளை கடைகளில் வாங்கி வரும்படி பள்ளிகளில் வற்புறுத்துவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

இந்தாண்டு

  • விலையில்லா புத்தகங்கள் (1 முதல் பிளஸ் 2 வரை), 
  • நோட்டுகள் (1 முதல் 10ம் வகுப்பு வரை), 
  • புத்தகப் பை (1 முதல் பிளஸ் 2 வரை), 
  • சீருடை (1முதல் 8ம் வகுப்பு வரை), 
  • கலர் பென்சில் (1முதல் 5ம் வகுப்பு வரை) 
என 13 வகையான விலையில்லா பொருள்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.

பள்ளி துவங்கிய நாளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் நிலையில் அவற்றை எழுத நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் எழுத நோட்டுகள் தேவை என்பதால் பள்ளிகளில், கடைகளில் விலைக்கு வாங்கி வரும்படி பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர்.

மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்த மாணவியின் தந்தை முருகன் கூறியதாவது:
எனக்கு பள்ளிகளில் படிக்கும் 3 பெண்கள் உள்ளனர். அரசு அறிவித்த விலையில்லா புத்தகம் உதவியாக இருந்தது. தற்போது நோட்டுகளை விலைகொடுத்து வாங்கி வர சொல்கின்றனர். ஒருவருக்கு ஒரு ஜோடி நோட்டுகள் வாங்க குறைந்தது ரூ.200 வரை செலவாகிறது. என்னை போன்ற பெற்றோர்களுக்கு சுமையாக உள்ளது. அரசு அறிவித்த விலையில்லா நோட்டுகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும், என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அரசு அறிவித்த விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டங்கள் மாணவர்களுக்கு ஒவ்வொன்றாக வழங்கப்படும். புத்தகங்கள் கொடுத்து முடித்தவுடன் நோட்டுகள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசின் விலையில்லா பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்,'' என்றார்.

நன்றி:

 

டி.இ.டி., தேர்வர்களுக்கு மொழிப்பாடம் : தேர்வு மையத்தில் தேர்வு செய்யலாம்

டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அனுமதி: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம் எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள், தேர்வு அறைக்குச் சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து, அதைப் பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக் குறிப்பிட்டால் போதும்.

ஐந்து மொழிகளில்... : இதற்கு வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள் இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி, சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம் பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும்.

இவ்வாறு டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:


 

முப்பருவ கல்வி முறை பயிற்சி: கருத்தாளர்கள் "அதிருப்தி"

பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் திட்டமிடல் இல்லை என, கருத்தாளர்கள் (எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள்) அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு குறித்த பயிற்சி முகாம் அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது.

பயிற்சியளிக்கும் கருத்தாளர்கள் சிலர் கூறியதாவது:
இந்த பயிற்சி வகுப்பு நடத்த "பவர் பாயின்ட்' மிக முக்கியம். தேர்வு செய்யப்படும் மையங்களில் இந்த வசதி சரியாக இருப்பதில்லை. படவிளக்க காட்சியுடன் பயிற்சி அளிக்க போராட வேண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதற்காக பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கு பயணப்படியும் வழங்கப்படுவதில்லை. ஒரு மையத்தில் உள்ள பெண் கருத்தாளர்களை முன்னறிவிப்பு இன்றி தொலைவில் உள்ள மற்றொரு மையத்துக்கு உடனடியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பயிற்சி அளிப்பதற்காக உரிய காலஅவகாசம் அளிக்கப்படுவதில்லை

என, கருத்தாளர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கூறுகையில்,
""முறையான திட்டமிடலுக்கு பின்னரே இப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சில இடங்களில் "பவர் பாயின்ட்' பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது சரிசெய்யப்படும்,'' என்றார்.

நன்றி:



6/11/2012

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை. ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏ.இ.இ.ஓ., - முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவு வெளியீடு : விடைகளை வெளியிட டி.ஆர்.பி., முன் வராதது ஏன்?

உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவை, நேற்று முன்தினம் இரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இரு தேர்வுகளுக்குரிய விடைகளை டி.ஆர்.பி., வெளியிடாதது ஏன் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விடைகளை வெளியிடாவிட்டால், கோர்ட்டுக்குச் செல்வோம் எனவும் கூறியுள்ளனர்.

நம்பிக்கை : தொடக்க கல்வித் துறையில், 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை நியமனம் செய்ய, பிப்ரவரி 26ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடந்தது. இதில், 66 ஆயிரத்து 948 பேர் பங்கேற்றனர். இதேபோல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில், 33 முதுநிலை விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, மார்ச் 4ல் நடந்தது. இதில், 619 பேர் பங்கேற்றனர். இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை, நேற்று முன்தினம் இரவு டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். பாட வாரியாக தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் எண்ணிக்கையை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. ஆனால், பெயர்களை வெளியிடவில்லை. நன்றாகப் படித்து தேர்வெழுதியவர்கள், தேர்வாகி விடுவோம் என நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், பலருக்கும் தேர்வு முடிவு அதிர்ச்சி அளித்துள்ளதுஒப்பீடு : இது குறித்து, விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், 24, கூறியதாவது: ஏ.இ.இ.ஓ., தேர்வுக்காக நானும், என் நண்பர்களும் இத்தேர்வுக்காக கடினமாக உழைத்தோம். பாடத்திற்கு 110 மதிப்பெண்கள், பொது அறிவுக்கு 10 மதிப்பெண்கள், கல்வியியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. தேர்வை நன்றாக எழுதினோம். ஆனால், எங்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை. 125 மதிப்பெண்கள் கிடைக்கும் என, நான் எதிர்பார்த்தேன். ஆனால், 105 மதிப்பெண்கள் தான் கிடைத்தது. ஏ.இ.இ.ஓ., தேர்வு பட்டியலில், அதிகபட்சமாக 117 மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடம்பிடித்துள்ளனர். சரியான முறையில் மதிப்பீடு நடந்ததா எனத் தெரியவில்லை. தேர்வுக்கான விடைகளை, இணையதளத்தில் வெளியிடுவதாக டி.ஆர்.பி., தலைவர், பத்திரிகை பேட்டியில் கூறினார். ஆனால், கூறியபடி விடைகள் வெளியிடவில்லை. எங்களிடம் விடைத்தாள் நகல் இருக்கிறது. டி.ஆர்.பி., விடைகளை வெளியிட்டால், அதனுடன் எங்களது விடைகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம். டி.ஆர்.பி., அலுவலகத்தில் போன் மூலம் கேட்டதற்கு, "விடைகளை வெளியிட முடியாது; தேர்வு முடிவு வெளியிடப்பட்டு விட்டது; அவ்வளவு தான்!' என்றனர். ஒளிவு மறைவின்றி, தேர்வுக்கான விடைகளை வெளியிட வேண்டும். இல்லையெனில், கோர்ட்டுக்குச் செல்வோம். இவ்வாறு குமார் கூறினார். இதேபோல், முதுநிலை விரிவுரையாளர் தேர்வுக்கான விடைகளையும் டி.ஆர்.பி., வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வெளிப்படை தன்மையை உறுதி செய்ய இதுவே வழி : இரு தேர்வுகளிலும் தேர்வு செய்யப்பட்டவர்கள், உண்மையிலேயே தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா என்பதை, தற்போதைய நிலையில் யாரும் உறுதி செய்ய முடியாது. ஏனெனில், தேர்வு செய்யப்பட்டவர்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில் வெளியிடவில்லை; "கீ-ஆன்சரும்' வெளியிடவில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், பெற்ற மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்படவில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில், பதிவெண்களை பதிவு செய்தால் மதிப்பெண்கள் தெரியும் வகையில், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "கீ-ஆன்சரை' வெளியிட்டாலே, தேர்வெழுதிய அனைவரும், தங்களின் மதிப்பெண்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 / கே 2 / 2012, நாள்.  6. 2012 பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி  மாணவர்களுக்கு  சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

6/10/2012

வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13

  • ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
  • ஜூலை -   புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
  • ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
  • அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
  • 14-07-2012  - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
  • 11-08-2012  - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
  • 15-09-2012  - செயல்திட்டம்
  • 20-10-2012  - உள்ளடங்கிய கல்வி
  • 17-11-2012  - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  • 08-12-2012  - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
  • 12-01-2012  - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
  • 09-02-2012  - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
  • 09-03-2012  - பள்ளி சுகாதாரம் மற்றம் தன் சுத்தம்

ஜூலை 2012 முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்ப்பு

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது, 65 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி, பெடரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவதற்கு, வாய்ப்பு உருவாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

பள்ளிகளில் பணிநிரவல்: ஆசிரியர்களுக்கு சிக்கல்

உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு முன் காலிப் பணியிடங்களை, பணிநிரவல் முறையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் / மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களில், ஒரே பாடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாறுதல் செய்யப்படுவார். இதுபோல பணிநிரவல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

பணிநிரவல் அடிப்படையில் தான், காலிப் பணியிடங்கள் வெளியிடப்படும்.

நன்றி:


அடுத்த மாதம் அமலாகிறது அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம்

பொது மக்களுக்கு இருப்பதைப் போலவே, தமிழகத்தில் உள்ள பல லட்சம் அரசு ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு, "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. அ.தி.மு.க., தலைமையில் புதிய அரசு உருவானதும், இந்த காப்பீட்டுத் திட்டம் கைவிடப்பட்டு, "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டம், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இலவசம்: இந்நிறுவனம், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் ஒரு நபருக்கு மருத்துவச் சிகிச்சைக்குரிய தொகையை வழங்கி வந்தது. இத்திட்டம் முழுவதும் இலவசம் என்பதால், ஸ்டார் ஹெல்த் நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அரசு ஈடு செய்து வந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், "முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும். ஒரு நபருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வரை என்றிருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை, 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 113 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை பெற முடியும்.

ஒப்படைப்பு: முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும், மூன்றாம் நபர் தான் மருத்துவச் செலவை மருத்துவமனைகளுக்கு அளித்து வருகிறார். ஆனால், "ஸ்டார் ஹெல்த்' என்ற தனியார் நிறுவனத்துக்கு பதில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான "யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன'த்திடம் தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒப்படைத்துள்ளது.

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு:
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மாத ஊதியத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்காக குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. இத்தொகையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு அளித்து, மருத்துவக் காப்பீட்டுத் தொகை பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆலோசனை: "ஸ்டார் ஹெல்த் மூலம் அரசு ஊழியர்கள் பெற்று வந்த காப்பீட்டுக்கான காலம் ஜூன் மாதத்தோடுமுடிவடைவதால், ஸ்டார் ஹெல்த் நிவனத்தைக் கைவிட்டு, புதிய நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டத்தை அமல் செய்ய, அரசு ஆலோசித்து வருகிறது. பொது மக்களுக்கு உள்ளது போல, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்திடமே அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டமும் ஒப்படைக்கப்படலாம் என, அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்காக, தமிழக அரசின் உயர் அதிகாரி மட்டத்திலான ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

ரூ.2 லட்சம்? புதிய காப்பீட்டுத் திட்டத்தில், தற்போது அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அளவு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது, மாதத்துக்கு 25 ரூபாய் என, ஆண்டுக்கு 300 ரூபாய் மருத்துவக் காப்பீட்டுக்காக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிரிமியத் தொகை, மாதத்துக்கு 75 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

ஜூன் மாதத்துடன் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடனான காப்பீட்டு ஒப்பந்தம் முடிவடைவதால், இம்மாதம் முதலே அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்யும்.

நன்றி:


 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள விளையாட்டு பொருட்களில் உள்ள டயர்களில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளார்கள்.

6/07/2012

2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிநிரவலுக்கு பின் நடைபெறும்

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எனவே இதுகுறித்து கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் கூறியது கலந்தாய்வு முடிந்த பிறகு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 : 30 ஆசிரியர் மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்த உள்ளோம். அதில் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்களும் 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விதியை மாற்றி இனி
61 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள்       என  1 : 30 விகிதாச்சாரப்படி பணிநிரவல் முடித்தப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிலை தான் பள்ளிக் கல்வித்துறையிலும் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே 2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பணிநிரவலுக்கு பின் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி       1 : 30 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் தான் அதற்கான SSA நிதி மத்திய அரசிடம் இருந்து   விடுவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 05062012 
அரசாணை(நிலை) எண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009 அரசாணையின்படி தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3 கல்வித் தகுதியில்லாமல், பல ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

6/01/2012

இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011  

பொருள் : இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு.
பார்வை : உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
வினா எண்.1
                     அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள்.  என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?
பதில் : 
            அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பளிகளில் (சிறுபான்மையற்றது) எந்த பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலிப் பணியிடமாக உள்ளதோ, அந்த பாடத்தினை முதன்மை பாடமாகக் கொண்டு பி.எட்.,பயின்று முடித்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களை கொண்டே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (பாடவாரியாக) நிரப்பப்பட வேண்டும்.
                                                                                                                       / Sd /
                                                                                              பள்ளிக்கல்வி இணை இயக்குநர்,
                                                                                                           (இடைநிலைக் கல்வி)
பெறுநர் : திருமதி. ஜீவாகமலக்கண்ணன்,
நகல் : தகவல் உரிமை ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், தேனாம்பேட்டை, சென்னை - 600 018.

முப்பருவ கல்விமுறையில் ஐந்து வகை பதிவேடுகள்

உடுமலை: பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ள முப் பருவ கல்விமுறையில், ஐந்து விதமான பதிவேடுகளை பராமரிப்பது குறித்து ஆசிரிய

ர்களுக்கு பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது.புத்தகங்களை சுமந்து சென்று படிப்பதற்கு பதிலாகவும்; தேர்வு பயத்தினால், பள்ளியில் இடை நிற்றல்

அதிகரிப்பதை தவிர்க்கும் வகையிலும், பருவ முறையில் கல்வி கற்பிக்கும் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த அரசு முடிவெடுத்தது.
அதன்படி, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் முதல் பருவமும்; செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் பருவமும், ஜனவரி மாதம்

முதல் ஏப்ரல் மாதம் முறை மூன்றாம் பருவம் என பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அப்பருவத்திற்கு ஏற்றாற் போன்று புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு மாற்றாக மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. இதில், வளர் அறிவு தேர்வு முறை, தொகுத்து

அறிவு தேர்வு முறை என இரண்டு முறையில் மதிப்பீட்டு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல், கிரேடு வழங்கப்பட உள்ளது. இது குறித்து

ஆசிரியர்களுக்கு விளக்கும் வகையில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 6,7,8 கற்பிக்கும்

ஆசிரியர்களுக்கு தொடர் மதீப்பீட்டு முறை குறித்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில், எட்டு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர்

கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களும், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களும் பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாமில், மாணவர்களின்

திறனை மேம்படுத்துவது குறித்தும்; அவர்களது திறமையை எவ்வாறு மதிப்பீடுவது என்பது குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் இம்முறையில் பின்பற்ற வேண்டிய

பதிவேடுகள் குறித்தும் விளக்கப்பட்டன.அதில், மதிப்பீடு முறையில், மாணவர் கற்றல் செயல்பாட்டுப்பதிவேடு, ஆசிரியர் மதிப்பீட்டுப்பதிவேடு, ஆசிரியர் மதிப்

பீட்டுப்பதிவேடு-தொகுப்பு மதிப்பெண் மற்றும் தரநிலைப்பதிவேடு கல்விசார் படாப்பகுதிகள் மற்றும் உடற்கல்வி, பாட இணைச் செயல்பாடுகள்- வாழ்க்கை திறன்கள்

தரநிலைப்பதிவேடு, மனப்பான்மைகளும், மதிப்புகளும் தர நிலைப்பதிவேடு, நன்னலம், யோகா மற்றும் முழு உடற்பயிற்சி தரநிலைப்பதிவேடு, பிற இணைச் செய

ல்பாடுகளான நாட்டுப்புறக் கலைகள், மரபு விளையாட்டுகள், மன்றச் செயல்பாடுகள் தர நிலைப்பதிவேடு, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீடு சரிபார்ப்புப்பட்டியல்

மதிப்பெண் மற்றும் தர நிலை பதிவேடு, மாணவர் திரள் பதிவேடு, மாணவர் மதிப்பீட்டு அட்டை, ஆண்டு இறுதித்தரநிலை உள்ளிட்ட பதிவேடுகளை முறையாக

பராமரிப்பது குறித்தும் என ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.