STFI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
STFI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11/08/2015
8/12/2015
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம்
லேபிள்கள்:
STFI
இன்று (11.8.2015) சிவகங்கையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தவமணி செல்வம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் சங்கர் தீர்மானங்களை முன் மொழிந்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி, மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டாரச்செயலாளர்கள் சகாயதைனேஸ், ஜெயக்குமார், சிவகங்கை வட்டாரத் தலைவர் டேவிட் ரொசாரியோ, பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி செபடம்பர்-2ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
2. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 23.8.2015ல் சிவகங்கையில் நடத்துவது எனவும், அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவாற்றப்பட்டது.
3. தற்பொழுது நடைபெற இருக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை எவ்வித ஊழலுக்கும் இடம் தராமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாவட்ட கல்வித்துறையை .இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4. மாறுதல் கலந்தாய்விற்கு முன்னால் முறைகேடாக நிர்வாக மாறுதலை வழங்குவதை தவிர்க்க மாவட்ட கல்வித் துறையை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
1. புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி செபடம்பர்-2ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
2. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 23.8.2015ல் சிவகங்கையில் நடத்துவது எனவும், அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவாற்றப்பட்டது.
3. தற்பொழுது நடைபெற இருக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை எவ்வித ஊழலுக்கும் இடம் தராமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாவட்ட கல்வித்துறையை .இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4. மாறுதல் கலந்தாய்விற்கு முன்னால் முறைகேடாக நிர்வாக மாறுதலை வழங்குவதை தவிர்க்க மாவட்ட கல்வித் துறையை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு அழைப்பிதழ்
லேபிள்கள்:
STFI
7/22/2015
3/19/2015
STFI சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம் நோட்டீஸ்
லேபிள்கள்:
STFI
3/17/2015
STFI மாவட்ட கூட்டம் - சிவகங்கை - தினமலர் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
STFI
3/13/2015
STFI 20ந் தேதி ஆர்ப்பாட்டம் நோட்டீஸ் மாதிரி - நகலெடுத்து அச்சடிக்கவும்
லேபிள்கள்:
STFI
3/07/2015
9/19/2014
"தாய்மொழியே உயர்வுக்கு வழி"- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI) திண்டுக்கல்லில் நடத்திய சிறப்புக் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உரை.
லேபிள்கள்:
STFI
திண்டுக்கல்லில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஞாயிறன்று நடந்த சிறப்புக் கருத்தரங்கில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசியதாவது:மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு சமீபகாலமாக மொழித்திணிப்பு வேலைகளில் ஈடு பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகிறார்கள். தாய் மொழிக்கல்விதான் ஒரு மாண வனை அறிவுடையவனாக, திறன் மிக்கவனாக உயர்த்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தி பேசும் மாணவர்கள் தங்களுக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை மட்டும் பயின்றால் போதும். இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் தங்களது தாய்மொழியோடு, இந்தி யையும், தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும் சேர்த்து 3 மொழி களை கற்க வேண்டியுள்ளது. தமிழ கத்தில்தான் பள்ளி மாணவன் தமிழ் மொழியை படிக்காமலேயே பள்ளிப் படிப்பை முடித்துச் செல்ல முடியும்.
இதுபற்றி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது அமைச்சர்கள் கொதிப்படைகிறார்கள். உண் மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? இது உண்மைதானா என்று ஏன் ஆய்வு செய்யக்கூடாது?. கர்நாடகா மாநிலத்தில் 14 வயது வரை ஒரு மாணவன் கட்டாயமாக கன்னட மொழியை கற்க வேண்டும் என்றுஅந்த மாநில அரசு கட்டாயப்படுத் துகிறது. அதற்கான சட்டமும் அமலாகி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு சட்டம் இல்லை. அரசுப் பள்ளிகளில் உள்ளது போன்ற விளையாட்டு மைதானங்கள் தனியார் பள்ளி களில் இல்லை. அரசுப் பள்ளி களை மேம்படுத்த சுற்றுச் சுவர், கட்டிடங்கள் கட்டி, நவீன வசதி கள் கொண்ட கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி என்பதை உத்தரவாதமாக வழங்கினால் தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேரும் வாய்ப்பு உள்ளது.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளி களில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்குப் பயந்து தற்போது மாண வர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளிலேயே சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த முன்வர வேண்டும். அதற்கு தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் பேசியதாவது:நள்ளிரவில் இந்தியா சுதந் திரம் பெற்றது. இந்திய நாடு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் பெற வேண்டும் என்று யாராவது கேள்விஎழுப்பினார்களா? இல்லை. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றால் தான் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று ஒரு ஜோதிடர் கூறியதால் கிடைத்தது. அதற்காக தில்லியில் ஹோமம் எல்லாம் வளர்த்து, பூஜைகள் எல்லாம் செய்துதான் சுதந்திரம் பெற்றார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டில் நேரு போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்டவர்களால் கூட இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. இன் றைக்கு மதவெறி பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது.
நாட்டில் உள்ள அனைத்து கல்வி முறைகளிலும் குருகுல கல்வி முறைதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளி நடத்தப் போவதாக கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளிகள் பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தார் உள்ள பகுதிகளில் தான்இருக்கும். அங்கே தலித் மக்கள்ஒடுக்கப் பட்ட மக்கள் அந்த பள்ளியில் சேர்ந்து பயில முடியாது. அரசுப் பள்ளிகளில் தான் தமிழ் உள்ளது. மாணவர்களிடம் இருந்துநாம் கற்றுக் கொண்டு மாணவர் களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பெண்கள் போடும் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச் பொதுச் செயலாளர் க.இராஜேந்திரன் பேசியதாவது:2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இலவசமாக கட்டாய கல்வியை அமலாக்கச் சொல்கிறது. ஆனால் சட்டம் முழுமையாக அமலாகவில்லை. துவக்கக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்றுகோருகிறோம்.
அதனை எந்த மாநில அரசும் அமலாக்க முனைவ தில்லை. மத்திய நிதியில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கமிசன் கூறுகிறது. எந்த மத்திய அரசாங்கமும் 4 சதவீதத்தை தாண்டி நிதி ஒதுக்கு வதில்லை. இங்கே கல்வி வியா பாராம் ஆக்கப்பட்டுள்ளது. கேரளா, மிசோரம் மாநிலங்களுக்கு அடுத்து திரிபுரா முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மாணிக்சர்க்கார் கூறும் போது எங்கள் மாநிலம் 95.1 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறிவிடும் என்று கூறினார். நிதி பற்றாக்குறை உள்ள.
மலைவாழ் மக்கள் நிறைந்த மாநிலமான திரிபுரா கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்கி இந்த சாதனையை செய்யும் போது ஏன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இது சாத்தியப்படவில்லை. மாநில அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், பாண்டிச்சேரி ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
இதுபற்றி சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது அமைச்சர்கள் கொதிப்படைகிறார்கள். உண் மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? இது உண்மைதானா என்று ஏன் ஆய்வு செய்யக்கூடாது?. கர்நாடகா மாநிலத்தில் 14 வயது வரை ஒரு மாணவன் கட்டாயமாக கன்னட மொழியை கற்க வேண்டும் என்றுஅந்த மாநில அரசு கட்டாயப்படுத் துகிறது. அதற்கான சட்டமும் அமலாகி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு சட்டம் இல்லை. அரசுப் பள்ளிகளில் உள்ளது போன்ற விளையாட்டு மைதானங்கள் தனியார் பள்ளி களில் இல்லை. அரசுப் பள்ளி களை மேம்படுத்த சுற்றுச் சுவர், கட்டிடங்கள் கட்டி, நவீன வசதி கள் கொண்ட கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி என்பதை உத்தரவாதமாக வழங்கினால் தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேரும் வாய்ப்பு உள்ளது.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளி களில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்குப் பயந்து தற்போது மாண வர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிகளிலேயே சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த முன்வர வேண்டும். அதற்கு தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன் பேசியதாவது:நள்ளிரவில் இந்தியா சுதந் திரம் பெற்றது. இந்திய நாடு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் பெற வேண்டும் என்று யாராவது கேள்விஎழுப்பினார்களா? இல்லை. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றால் தான் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று ஒரு ஜோதிடர் கூறியதால் கிடைத்தது. அதற்காக தில்லியில் ஹோமம் எல்லாம் வளர்த்து, பூஜைகள் எல்லாம் செய்துதான் சுதந்திரம் பெற்றார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டில் நேரு போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்டவர்களால் கூட இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. இன் றைக்கு மதவெறி பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது.
நாட்டில் உள்ள அனைத்து கல்வி முறைகளிலும் குருகுல கல்வி முறைதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளி நடத்தப் போவதாக கூறுகிறார்கள். திண்ணைப் பள்ளிகள் பெரும்பாலும் ஆதிக்க சமூகத்தார் உள்ள பகுதிகளில் தான்இருக்கும். அங்கே தலித் மக்கள்ஒடுக்கப் பட்ட மக்கள் அந்த பள்ளியில் சேர்ந்து பயில முடியாது. அரசுப் பள்ளிகளில் தான் தமிழ் உள்ளது. மாணவர்களிடம் இருந்துநாம் கற்றுக் கொண்டு மாணவர் களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பெண்கள் போடும் கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய பொதுச் பொதுச் செயலாளர் க.இராஜேந்திரன் பேசியதாவது:2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இலவசமாக கட்டாய கல்வியை அமலாக்கச் சொல்கிறது. ஆனால் சட்டம் முழுமையாக அமலாகவில்லை. துவக்கக் கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்றுகோருகிறோம்.
அதனை எந்த மாநில அரசும் அமலாக்க முனைவ தில்லை. மத்திய நிதியில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கமிசன் கூறுகிறது. எந்த மத்திய அரசாங்கமும் 4 சதவீதத்தை தாண்டி நிதி ஒதுக்கு வதில்லை. இங்கே கல்வி வியா பாராம் ஆக்கப்பட்டுள்ளது. கேரளா, மிசோரம் மாநிலங்களுக்கு அடுத்து திரிபுரா முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மாணிக்சர்க்கார் கூறும் போது எங்கள் மாநிலம் 95.1 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறிவிடும் என்று கூறினார். நிதி பற்றாக்குறை உள்ள.
மலைவாழ் மக்கள் நிறைந்த மாநிலமான திரிபுரா கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்கி இந்த சாதனையை செய்யும் போது ஏன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இது சாத்தியப்படவில்லை. மாநில அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், பாண்டிச்சேரி ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
9/16/2014
9/06/2014
8/28/2014
11/24/2013
STFI_ ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
லேபிள்கள்:
STFI

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக பெண்களைக் காக்க, பெண்களுக்காக- பத்து லட்சம் பேரிடம் இந்திய நாடு முழுவதும் பெற்ற கையெழுத்து இயக்க படிவங்களை கடந்த 18.11.2013 அன்று இந்திய குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி பவனில்சந்தித்து வழங்கிய போது .-அகில இந்திய தலைவர்கள். STFI அகில இந்தியத்துணைத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் TNPTF மாவட்டச்செயலாளருமான தோழர் கணேசன் உடன் உள்ளார.
8/05/2013
8/02/2013
STFI ஒரு கோடி கையெழுத்து இயக்கம் - துவக்க விழா
லேபிள்கள்:
STFI


9/18/2011
புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
லேபிள்கள்:
STFI
மத்திய,மாநில அரசு ஊழியர் ,பள்ளி ,கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக"கூட்டு போராட்டக்குழு கூட்டம் " நக்கீரர் அரங்கம் சென்னையில் 25-08-2011 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் 22-09-2011 அன்று மதியம் 2.00 மணியளவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
8/25/2011
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
STFI
சிவகங்கை, ஆக. 23: தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆசிரியர்களின் பணிமாறுதலை உடனடியாக பொது கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். முறைகேடாகப் பணிமாறுதல் வழங்கக் கூடாது. கலந்தாய்வுக்கான நெறிவுரைகளை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு, சிவகங்கை மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராமசாமி, மாநில துணைத் தலைவர் ராஜரத்தினம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இதில் உரை நிகழ்த்தினர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















3%2Bcopy.jpg)









