பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
tetojac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tetojac லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9/26/2015

ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அக்டோபர்-8

இனிய தோழமையே!!!

பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு அக்டோபர் 8 வேலை நிறுத்தத்திற்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ... உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 15 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள 28 ஆசிரியர் இயக்கங்கள் ஜேக்டோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் அக்டோபர் 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜேக்டோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரை நாளை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். ஒன்று கூடியவர்களும் ஓடிய வரலாற்றை மறந்து ஒன்றாக்கப்பட்டுள்ளார்கள். வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு அக்டோபர்-8 அனைத்து பள்ளிகளும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கல்வித்துறையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜேக்டோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் வேலை நிறுத்தத்திற்கு அழைக்க தவறாதே. ஜேக்டோவின் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. முதல் பருவதத்திற்கான விடுமுறையை வேலை நிறுத்த ஆயத்தத்திற்காக பயன்படுத்து.
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் நமது இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அக்டோபர் - 8 வேலை நிறுத்தத்தை எப்படி வெற்றியாக்குவது என இறுதிக்கட்ட திட்டமிடல் நடைபெற இருக்கிறது. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
வெற்றி நமதே...

தொடர்ந்து உன்னோடு வருவேன்...

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

9/10/2015

இன்று (10.9.2015) சிவகங்கையில் ஜேக்டோ மாவட்ட கூட்டம்

இன்று (10.9.2015) சிவகங்கையில் ஜேக்டோ மாவட்ட கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஜேக்டோவில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் உயர் மட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் வருகிற அக்டோபர்-8 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டினை வருகிற 20.9.2015 அன்று காலை 10.00 மணிக்கு மன்னர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் வட்டார நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், முன்னனி உறுப்பினர்கள் பங்கேற்க தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்....
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
TNPTF

3/08/2015

சிவகங்கை மாவட்டத்தை குலுக்கிய ஜேக்டோ ஆர்ப்பாட்டம்

இன்று நடைபெற்ற ஜேக்டோ ஆர்ப்பாட்டத்தால் சிவகங்கை அரைன்மணை வாசல்  தான் சந்தித்திராத கூட்டத்தால் அதிர்ந்தது. ஆசிரியர்களின் பலத்த கோஷத்தால் சிவகங்கையே குலுங்கியது. இதில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர் இயக்க உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளை தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.



தமிழக அரசின் மௌனம் கலையுமா?

சிவகங்கை ஜேக்டோ பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எனது எழுச்சி உரை


2/22/2015

எழுச்சியுடன் நிறைவு பெற்ற ஜாக்டோ போராட்ட ஆயத்த கூட்டம்

இன்று சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஜாக்டோ போராட்ட ஆயத்த கூட்டம் தோழர் இளங்கோ மற்றும் சகோதரர் ஜோசப் சேவியர் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. ஜாக்டோவில் இணைந்துள்ள இயக்கங்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன. இயக்க பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் வட்டார நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாக எழுச்சியுடன் உரையாற்றினர். வருகிற மார்ச் -8ல் சிவகங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி தமிழகத்திற்கே முன் மாதிரியாக விளங்கும் வகையில் சிறப்பாக நடத்திட அனைவரும் உறுதி பூண்டனர். இன்று முதல் அதற்கான ஆயத்த வேலைகளை வட்டார நிர்வாகிகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். 25.2.2015 அன்று தமிழக முதல்வர் ஜேக்டோ உயர்மட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதால் அதற்கு பின்னால் மாவட்ட ஜேக்டோ நிர்வாகிகள் சந்திப்பது என முடிவாற்றப்பட்டது. போராட்ட களம் சூடாகி விட்டதால் நிர்வாகிகளே தயாராகுங்கள்....


2/05/2015

ஜாக்டோ கூட்டம் முடிவுகள். 5மாவட்டங்களில் TNPTF தலைமையேற்கும்

நேற்று சென்னையில் கூடிய அனைத்து ஆசிரியர் இயக்கங்களின்கூட்டமைப்பில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.
1. 15.2.2015 மாவட்ட பொதுக்குழு கூட்டம்
2. 22.2.2015 மாவட்ட போராட்ட ஆயத்த கூட்டம்
3. 8.3.2015 மாவட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தேனி, நீலகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமையேற்கும். இந்த 5 மாவட்டங்களில் TNPTF மாவட்ட அமைப்பாளராக செயல்படும். மற்ற மாவட்டங்களில் தேழமை இயக்கங்கள் அமைப்பாளராக செயல்படுவார்கள். எனவே மாவட்ட பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்க மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். 

2/04/2015

JACTO கூட்டம்

டிட்டோஜாக் கூட்டம் முடிந்து தற்பொழுது ஜாக்டோ கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைக்கு தனி தர ஊதியம், 4ஃ3 விதியை அமுல்படுத்துதல், தமிழ்வழிக் கல்வி உள்ளிட்ட கோரிக்கைகளை சேர்க்க கூட்டத்தில் வலியுறுத்துவது என முடிவாற்றப்பட்டதாக தெரிகிறது. அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டதாக தெரிகிறது.

டிட்டோஜாக் கூட்டம்

டிட்டோஜாக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஏற்கனவே அங்கம் வகிக்கும் 6 சங்கங்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.