பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/26/2015

ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அக்டோபர்-8

இனிய தோழமையே!!!

பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு அக்டோபர் 8 வேலை நிறுத்தத்திற்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ... உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 15 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள 28 ஆசிரியர் இயக்கங்கள் ஜேக்டோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் அக்டோபர் 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜேக்டோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரை நாளை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். ஒன்று கூடியவர்களும் ஓடிய வரலாற்றை மறந்து ஒன்றாக்கப்பட்டுள்ளார்கள். வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு அக்டோபர்-8 அனைத்து பள்ளிகளும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கல்வித்துறையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜேக்டோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் வேலை நிறுத்தத்திற்கு அழைக்க தவறாதே. ஜேக்டோவின் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. முதல் பருவதத்திற்கான விடுமுறையை வேலை நிறுத்த ஆயத்தத்திற்காக பயன்படுத்து.
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் நமது இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அக்டோபர் - 8 வேலை நிறுத்தத்தை எப்படி வெற்றியாக்குவது என இறுதிக்கட்ட திட்டமிடல் நடைபெற இருக்கிறது. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
வெற்றி நமதே...

தொடர்ந்து உன்னோடு வருவேன்...

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக