பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/18/2015

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க கோரிக்கை

முதல் பருவத்தேர்வு தொடங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது: செப்.19 ஆம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்க உள்ளது.
இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை 4 நாள்கள் வீதம் நான்கு கட்டங்களாக முடித்துள்ள நிலையில், கணித உபகரண பயிற்சி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10, 11, 14 தேதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 15, 16, 18 தேதிகளிலும் நடக்க இருக்கிறது. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவியல் பயிற்சி 15, 16, 18 தேதிகளிலும், ஆங்கிலப்பயிற்சி 14, 21, 28 தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ள பெரும்பான்மையான ஆசிரியர்கள் சென்று விடுவதால், பள்ளியில் குறைவான ஆசிரியர்கள் உள்ளனர். பல பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே நீடிக்கும் நிலை உள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக