பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/19/2017

நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். இதுவரை அந்த குழு எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட பின், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த, மாநில அரசின் எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 2017 ஜூன் 30-க்குள் அளிக்க உத்தரவிட்டார். ஆனால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிடவும், நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக முதல்வர் பழனிசாமி முன் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக