அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக, உளவு போலீசார், அரசுக்கு தகவல்
அனுப்பி உள்ளனர்.அ.தி.மு.க., அரசு, சட்டசபை தேர்தல் அறிக்கையில், "ஆறாவது
ஊதியக்குழு ஒருநபர் கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும்'
என கூறியிருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றபின் புதிய அறிவிப்பு
வெளியாகவில்லை.மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்தும், மாநில அரசு,
அகவிலைப்படி உயர்வு குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. இது போன்ற
காரணங்களால், அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களிடம் அரசின்
செயல்பாடுகள் குறித்து எதிர்நிலையான கருத்துக்களை தெரிவித்து
வருகின்றனர்.இவர்கள் அதிருப்தியில் உள்ளதாக உளவுப்பிரிவு போலீசார்,
அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.- நமது சிறப்பு நிருபர்