பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/01/2012

கணிதப்பிரிவில் 30 கேள்விகளுக்கு பதிலாக 20 கேள்விகளே கேட்கப்பட்டன ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தவேண்டும் பட்டதாரிகள் கோரிக்கை

சென்னை, ஆக.1-

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முறைப்படி நடத்தாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்தவேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-1 என்றும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-2 என்றும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 61/2 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வுகளில் விடைத்தாள் நகலை தேர்வு எழுதியவர்களே வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.

சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் (கீ-ஆன்சர்) விடைகளை வெளியிட்டது. அதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ விடைகள் தவறாக தெரிந்தாலோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தவறான விடைகள்

அந்த விடைகளில் சில தவறாக இருந்ததாக ஆசிரியர்கள் புகார் செய்தனர்.

நிபுணர்களை அழைத்து சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிந்து அதை இணையதளத்தில் வெளியிடுவதுதான் சரியானது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மேலப்பட்டியை சேர்ந்த உதவி பேராசிரியர் செல்வராசு தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கணிதத்தில் 20 கேள்விகள் மட்டுமே...

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் கணிதப்பிரிவில் 30 கேள்விகள் கேட்பதற்கு பதிலாக 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனால் கணிதம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.டி.இ. தெரிவித்த விதிமுறைப்படி கணிதத்தில் 30 கேள்விகள் கேட்கப்படவேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அதை கடைப்பிடிக்காமல் 20 கேள்விகளை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.

எனவே கணித ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்துவிட்டு சரி சமமாக கேள்விகள் எடுத்து தேர்வை நடத்தவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது போல பல பட்டதாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தேர்ச்சி சதவீத மார்க்கை குறைக்கவேண்டும் என்றும் ஏராளமான ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.