பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/05/2012

கல்வி வணிகமயமாக்கலை ஒழிக்க நாடு தழுவிய பெருந்திரள் இயக்கம்...!!


சென்னை, ஆக.3-

நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டத்தோடு இணைந் ததே கல்வியில் சம உரிமைக் கான போராட்டமும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைக்கான போராட் டத்தை ஒத்த கருத்துள்ள அர சியல் கட்சிகள், வெகு மக்கள் அமைப்புகளோடு இணைந்து நாடு தழுவிய அளவில் மேற் கொள்ளவும் உறுதி எடுக்கப் பட்டுள்ளது.கல்வி வணிக மயமாக்கல் ஒழிப்பு மற்றும் பொதுப்பள்ளி முறையைக் கட்டுதலுக்கான அகில இந்திய மாநாட்டுப் பிர கடனம் சென்னையில் வெள்ளி யன்று (ஆக.3) வெளியிடப்பட் டது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, அகில இந்திய கல்வி உரிமை கூட்டமைப்பு இரண் டும் இணைந்து அந்த மாநாட்டை கடந்த ஜூன் 30, ஜூலை 1 தேதிகளில் நடத்தியது தெரிந் ததே.“சமுதாய நிலைமைகளை அப்படியே வைத்துக்கொள்வ தாக இல்லாமல், அதை ஆக்கப் பூர்வமாக மறுகட்டுமானம் செய் வதில் பங்களிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் இளைஞர் களின் படைப்பாக்கத் திறனை யும் மனித ஆற்றலையும் வெளிப் படச் செய்கிற வரலாற்றுப்பூர்வ மான சமுதாயப் பங்கு கல் விக்கு உண்டு,” என்று சென் னைப் பிரகடம் தொடங்குகிறது

.இந்த லட்சியத்தைப் பொதுப் பள்ளி முறையால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தரமான கல்வியை அனைத்துக் குழந் தைகளுக்கும் சமமாக வழங்கு கிற கடமை அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து, உடல் நலம், சமூக-உளவியல் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாதுகாப்புடன் இணைந்த கல்வியை இலவச மாக அரசாங்கம் வழங்க வேண் டும். மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரையில் அருகமைப் பள்ளி அடிப்படையில் முழுக்க முழுக்க அரசு நிதியுடனான பொதுப்பள்ளி முறை நிலை நாட்டப்பட வேண்டும் என்று அந்தப் பிரகடனம் வலியுறுத்து கிறது.இந்தியாவில் நீண்ட நெடுங் காலமாகவே, பாடுபடும் மக்க ளுக்கு சமூக நிலை அடிப்ப டையில் கல்வி உரிமை மறுக்கப் பட்டு வந்திருக்கிறது. அந்தப் பின்னணியில் இன்று நீர், காடு, நிலம் ஆகிய உரிமைகள் போல பொதுப்பள்ளி என்பது ஒரு அடிப்படை உரிமையாக உறுதிப் படுத்தப்பட வேண்டும். நவீன தாராளமய மூலதனத்தாலும், பேராசை பிடித்த நிதிச்சந்தை களாலும், உள்நாட்டு மதவெறி சக்திகளாலும், குறுகிய பிளவு சக்திகளாலும், இதர பிற் போக்கு சக்திகளாலும் கடுமை யான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியா, உயர் தன்னாளுமை உரிமை உள்ள தேசம் என்ற தனது உரிமையைக் காக்க வேண்டு மானால், ஜனநாயகமும் சுதந்திர மும் உள்ள முற்போக்கான அமைதியான சமுதாயமாக நிலைத்திருக்க வேண்டுமா னால் கல்வியை உரிமையும் மக்களின் வாழ்வாhதார உரிமை களும் அடிப்படை உரிமைக ளாக உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் பிரகடனம் கூறு கிறது.1990ம் ஆண்டுகளின் தொடக் கத்தில் உலக வங்கி - பன் னாட்டு நிதியம் ஆகியவற்றின் கட்டளைப்படி கல்வித்துறைக் கான அரசுச் செலவினங்கள் வெட்டப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமாக உலக வங்கிக் கட்ட ளைப்படி பல்வேறு எதிர்மறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

அதன்படி முறையான நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக பயிற்சியற்ற ஒப்பந்த முறை ஆசிரியர்களை நியமிப்பது, இரண்டுக்கும் மேற்பட்ட வகுப்பு களுக்கு ஒரே ஆசிரியரே கற் பிப்பது, ஒரே அறையில் பல வகுப்புகள், பாகுபாடுகள் மிகுந்த பல அடுக்கு பள்ளி முறை, அரசு களின் நிதி ஒதுக்கீடு வெட்டு முதலிய நடவடிக்கைகளால் அனைவருக்கும் சமமான தரமான கல்வி என்ற லட்சியம் கைவிடப்பட்டது என்றும் அந்தப் பிரகடனம் கூறுகிறது.கல்வி வணிகமயமாக் கலை ஒழித்தல், அருகமைப் பள்ளி அடிப்படையில் முற்றி லும் அரசு நிதியுடனான பொதுப் பள்ளி முறையை நிலைநாட்டு தல், கல்வி முறை மாற்றத்திற் காக பெருந்திரள் மக்கள் இயக் கத்தைக் கட்டுதல் ஆகிய நோக்கங்களை முன்னெடுத் துச் செல்வது என்றும் பிரகட னத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.தற்போதைய கல்வி உரி மைச் சட்டம் பல வகைகளி லும் மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை நிராகரிப்ப தாக, அதனைத் தனியார் கை களில் ஒப்படைக்க வழிசெய்வ தாகவே இருக்கிறது என்று பிரகடனத்தை வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டு வழிநடத்து குழு தலைவருமான பேராசிரியர் அனில் சடகோபால் கூறினார்.சட்டத்தின் 51-ஏ பிரிவு குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதைப் பெற்றோரின் பொறுப்பாக்குகிறது.

அரசின் கடமையாக சட்டத்தில் வரை யறுக்கப்படவில்லை. உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு கல்விக்கடமை யைப் பெற்றோர் தலையில் தள்ளிவிடுகிற ஏற்பாடு இல்லை என்று மாநில மேடை பொதுச் செயலாளரும் வழிநடத்து குழு வின் செயலருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், மக்கள் நல் வாழ்வு இயக்க பொதுச்செயலா ளர் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற் குணம், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், மருத்துவர் பி. சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மாநில மேடை தலைவர் ஐ.பி. கனகசுந்தரம் தலைமை தாங்கினார், கவிஞர் செவ்வி யன் நன்றி கூறினார்.
நன்றி:  தீக்கதிர் நாளிதழ்.