பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/31/2014

பிப்ரவரி2 பேரணி - உரிமை மீட்டெடுப்பு பேரணி.

யார் போராடி கோரிக்கைகள் வென்றாலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதனால் பலன் கிடைக்கும். அதே போல் யாராவது போராடுவார்கள் நமக்கென்ன என யாராவது ஒதுங்கி நிற்பதால் போராட்டம் வலுவிழந்து கோரிக்கை நிறைவேறத் தாமதமானால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் இழப்பே!
ஆகவே இது நமக்கான போராட்டம் ஆசிரியர் சமுதாயத்தின் நலன் காப்பதற்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஆசிரியர் சமுதாய ஒற்றுமையையும் பலத்தையும் அரசுக்கு காட்டிட பேரணியில் அணி வகுக்க வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது அரசு தாமே மனமுவந்து அளித்ததல்ல. ஆசிரியர்களின் கூட்டுப் போராட்டத்தால் விளைந்த வெற்றி. ஆசிரியர்களின் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து அரசு வழங்கிய ஊதியம். பல கட்ட போராட்டக் களம் கண்டதன் விளைவாய் ஆசிரியர் சமுதாயம் பெற்று வந்த மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை ஆறாவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அரசு நம்மிடமிருந்து அதனைப் பறித்துள்ளது. நம்முடைய தாத்தா,அப்பா பாடுபட்டுச் சேர்த்த சொத்தை யாராவது அபகரித்தால் நாம் நமக்கென்ன என்று சும்மா இருப்போமா? அது போலத்தான் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது நம்முடைய ஆசிரியர் சமுதாயத்தின் குடும்பச் சொத்து. அன்று நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை இன்று நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இழந்த நம் குடும்பச் சொத்தை போராடி மீட்க வேண்டாமா? நம் முன்னோர் நமக்காகப் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை நாம் நமக்குப் பின்னால் வரும் ஆசிரியச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டாமா? அந்தக் கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டு ஆசிரியர்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்க ஆசிரியர் சமுதாயத்தின் ஒற்றுமையையும் வலிமையையும் அரசுக்கு உணர்த்திட அணி திரண்டு பிப்ரவரி-2 பேரணிக்கு வாரீர் தோழர்களே!
By Jagadeesh Varan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக