பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/10/2014

கையிலெடுக்கும் காலம் எப்போது?

தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்று பழைய பல்லவி பாடியாச்சு. ஆசிரியர் கலந்தாய்வில் பல லகரங்களுடன் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு என்ற சடங்கு நிறைவேறி முடிந்து விட்டது. இனி மேலாவது இந்த பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய கட்டு பிரச்சணை குறித்து சங்கங்கள் வாய் திறக்க முன் வருமா?.
                      அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்த ஒரு மிகப்பெரிய போராட்ட அறிவிப்பினை வெளியிட்டால் ஒழிய அரசாங்கம் நம்மை பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை. யார் கையிலெடுப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. உடனே மற்ற நண்பர்கள் எல்லாம் ஏன் உங்கள் சங்கம் கையிலெடுக்க வேண்டியதுதானே என்று மல்லுக்கு வந்த விடாதீர்கள். நாம் நாம் சார்ந்துள்ள இயக்க தலைமைகளை வலியுறுத்துவோம். ஒன்றுபட்ட போராட்டம் நிச்சயம் நம் துயரோட்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்தால், இவர்கள் அறிவித்து நாம் ஏன் போக வேண்டும் என்ற ஈகோவே மேலோச்சுகிறது.  எனவே நாம் மற்றவர்களை குறை கூறாமல் இயக்கங்களின் அடி நாதமாக விளங்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சணைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண முயல்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக