- அரசு விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாத பள்ளிகள் தொடர்ந்து இயங்க, வரும் கல்வியாண்டிலாவது தடை விதிக்க வேண்டும். பள்ளிகளில் ஆய்வு நடத்தும் பொறுப்பை உதவி கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்காமல், இதற்கென கல்வியாளர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தரமற்ற பள்ளிகளை அடையாளம் காண முடியும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின்பும் வசதியற்ற பள்ளிகளை தொடர்ந்து இயங்க அனுமதிப்பது, மற்றொரு விபத்து ஏற்பட வழிவகுத்து விடும். இது போன்ற பள்ளிகளை தொடர்ந்து இயங்க அனுமதித்தால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்
- முறையான உள்கட்டமைப்பு வசதியுள்ள பள்ளிகளின் விவரங்களை, "வெப்சைட்டில்' தாமதிக்காமல் வெளியிட வேண்டும். இது போன்ற வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் கணேசன் கூறினார்.
5/05/2011
குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காத பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக