டலூர்,ஜூன் 1: அரசு விதிகளைப் பின்பற்றாத மாற்றுமுறை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அமைப்பான பாரத் சேவக் சமாஜ் தமிழ்நாடு, புதுவை மண்டல திட்ட அதிகாரி, கடலூர் டாக்டர் ஏ.ரவி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாரத் சேவக் சமாஜ் அமைப்பு நாடு முழுவதும் கணினி, பாராமெடிக்கல், மாற்று முறை மருத்துவம், அழகுக்கலை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்குகிறது.
கடந்த கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அக்குபஞ்சர், யோகா, பஞ்சகர்மா, வர்மா, நேச்சரோபதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ், பட்டயப் பயிற்சிகளை பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டு உள்ளன. அவற்றுக்கான தேர்வுகளை உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பாரத் சேவக் சமாஜ் சிறப்பாக நடத்தி உள்ளது.
ஒரு சில மாற்று மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விதிகளப் பின்பற்றத் தவறியுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பாரத் சேவக் சமாஜ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள்குழு மூலமாக தேர்வு நடத்தாத நிறுவனங்கள், தங்களது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில் இத்தகைய மருத்துவப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றவைகளா அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதா என்பவற்றைத் தெரிந்து கொண்டு பயிற்சியில் சேர வேண்டும்.
இந்த விவரங்களை பாரத் சேவக் சமாஜ் மாற்றுமுறை மருத்துவத் திட்ட அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். செல்ஃபோன், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். தொடர்புக்கு முகவரி: பாரத் சேவக் சமாஜ் மாற்றுமுறை மருத்துவம், தமிழகம்- புதுவை மண்டலத் திட்ட அலுவலகம், எண்.22-அ. பாரதிதாசன் தெரு, மஞ்சக்குப்பம், கடலூர்-1. எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பெற 90252-22256.
பாரத் சேவக் சமாஜ் அமைப்பு நாடு முழுவதும் கணினி, பாராமெடிக்கல், மாற்று முறை மருத்துவம், அழகுக்கலை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்குகிறது.
கடந்த கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அக்குபஞ்சர், யோகா, பஞ்சகர்மா, வர்மா, நேச்சரோபதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ், பட்டயப் பயிற்சிகளை பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டு உள்ளன. அவற்றுக்கான தேர்வுகளை உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பாரத் சேவக் சமாஜ் சிறப்பாக நடத்தி உள்ளது.
ஒரு சில மாற்று மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விதிகளப் பின்பற்றத் தவறியுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பாரத் சேவக் சமாஜ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள்குழு மூலமாக தேர்வு நடத்தாத நிறுவனங்கள், தங்களது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில் இத்தகைய மருத்துவப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றவைகளா அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதா என்பவற்றைத் தெரிந்து கொண்டு பயிற்சியில் சேர வேண்டும்.
இந்த விவரங்களை பாரத் சேவக் சமாஜ் மாற்றுமுறை மருத்துவத் திட்ட அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். செல்ஃபோன், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல்களைப் பெறலாம். தொடர்புக்கு முகவரி: பாரத் சேவக் சமாஜ் மாற்றுமுறை மருத்துவம், தமிழகம்- புதுவை மண்டலத் திட்ட அலுவலகம், எண்.22-அ. பாரதிதாசன் தெரு, மஞ்சக்குப்பம், கடலூர்-1. எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பெற 90252-22256.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக