பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/25/2011

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ.11,000 கோடி மட்டுமே!

ஜெனிவா: சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களின் ஏராளமான கோடி பணம், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இந்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலர் ஊழல், முறைகேடு, வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்ற சமூக சேவகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சுவிஸ் நாட்டு வங்கிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், மத்திய அரசை விட மிக வேகமாக செயல்பட்டுவிட்ட இந்த கறுப்புப் பண முதலைகள், அதை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11,000 கோடி கறுப்பு பணம் மட்டுமே எஞ்சியுள்ளது தெரியவந்துள்ளது. இது உலக அளவில் சுவிஸ் நாட்டில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் வெறும் 0.07 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் வங்கி (நமது ரிசர்வ் பேங்க் மாதிரியான வங்கி இது) வெளியிட்டுள்ள செய்தியில், யு.பி.எஸ். மற்றும் கிரடிட்சூசி உள்ளிட்ட சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 2.1 பில்லியன் டாலர்களை சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துள்ளனர்.

இந்திய பத்திரிகைகள் இந்தியர்கள் பல லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதில் துளி கூட உண்மையில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்த குரல்கள் கடந்த 3 ஆண்டுகளில் தான் வலுவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால், இந்தப் பணத்தை மீட்டிருக்கலாம்.

ஆனால், அது குறித்த விவாதமே 3 ஆண்டுகளையும் தாண்டி நடந்து வரும் நிலையில் கறுப்புப் பண முதலைகள் அதை வேறு இடங்களுக்கும் நிதி அமைப்புகளுக்கும் வேறு முதலீடுகளிலும் மாற்றிவிட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக இந்தப் பணம் ஷெசல்ஸ், சிங்கப்பூர், மொரீசியஸ். மத்திய கிழக்கு நாடுகள், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் உள்ள வங்கிகளுக்கும் நிதி அமைப்புகளுக்கும் இடம் மாறிவிட்டதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக