பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/01/2011

கூடுதல் கல்வி தகுதிக்கு வழங்கிய ஊக்கத்தொகையை பிடித்தது தவறு

கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
 
நெல்லை கீழப்பாவூரை சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனு

நான் 1997ல் எம்.எட்., 1999ல் எம்.ஏ., முடித்தேன். என் கூடுதல் கல்வி தகுதிக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2004ல் தணிக்கையின் போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1997 முதல் 2000 ம் வரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்ய கல்வி துறையினர் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், "போலி ஆவணங்கள், பொய் தகவல்களை தெரிவித்து ஊக்கத்தொகை பெற்றால், அதை ரத்து செய்யலாம். கூடுதல் கல்வி தகுதிக்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, ஆசிரியர்களது கல்வி தகுதியை மேலும் அதிகரிக்க செய்யும். மனுதாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கல்வி துறையினர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.


நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக