சென்னை:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்காக, 152
பேர் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.இத்துறைக்கு, 268 பட்டதாரி
ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இதில், 152 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்ப் பட்டியல்,
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ((www.trb.tn.nic.in)
வெளியிடப்பட்டுள்ளன. 77 பேரின் தேர்வு முடிவுகள், சான்றிதழ் உள்ளிட்ட
காரணங்களால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு இனச் சுழற்சிகளில், போதிய
ஆட்கள் இல்லாததால், 35 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நான்கு பணியிடங்கள்,
கோர்ட் உத்தரவின்படி, "ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை,
துறையின் இணையதளத்தில் பார்க்கலாம்.
Source: Dinamalar
Source: Dinamalar