டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் 7837 மேற்பார்வையாளர்கள் தற்போது ரூ.4500 தொகுப்பு ஊதியம் பெறுகிறார்கள். இது ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 16,758 விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.3,200ல் ரூ.400 உயர்த்தி ரூ.3,600 ஆக வழங்கப்படும்.
மதுக்கடை உதவியாளர்கள் 4,036 பேர் தற்போது ரூ.2,400 பெறுகிறார்கள். இதை ரூ.300 உயர்த்தி ரூ.2,700 ஆக வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 28,631 தொகுப்பூதிய பணியாளர்கள் பயன் அடைவர். ஆண்டு ஒன்றுக்கு ரூ.14 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
டாஸ்மாக் சில்லரை கடைகளில் குளிரூட்டப்பட்ட பீர் பாட்டில்கள் வழங்குவதற்காக முதல்கட்டமாக 2500 கடைகளுக்கு குளிர்பதன பெட்டிகள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் 7837 மேற்பார்வையாளர்கள் தற்போது ரூ.4500 தொகுப்பு ஊதியம் பெறுகிறார்கள். இது ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 16,758 விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.3,200ல் ரூ.400 உயர்த்தி ரூ.3,600 ஆக வழங்கப்படும்.
மதுக்கடை உதவியாளர்கள் 4,036 பேர் தற்போது ரூ.2,400 பெறுகிறார்கள். இதை ரூ.300 உயர்த்தி ரூ.2,700 ஆக வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 28,631 தொகுப்பூதிய பணியாளர்கள் பயன் அடைவர். ஆண்டு ஒன்றுக்கு ரூ.14 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
டாஸ்மாக் சில்லரை கடைகளில் குளிரூட்டப்பட்ட பீர் பாட்டில்கள் வழங்குவதற்காக முதல்கட்டமாக 2500 கடைகளுக்கு குளிர்பதன பெட்டிகள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக