பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/17/2012

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் பெறப்பட்டது. பின்னர் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதுநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு ஆகியவை முடிந்துள்ளது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 23, 24ம் தேதிகளில் நடக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை தற்போது 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் கிடையாது. பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களே தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 31.05.2012 நிலவரப்படி காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.

இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லாத நிலை உள்ளது. எனவே வரும் ஜூலை 30ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வின் போது ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள் எதுவும் இல்லாத நிலையில் பதவி உயர்வால் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) ராஜ ராஜேஸ்வரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவுடன் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: