பாட்னா: பீகாரில் அடுத்தடுத்து மதிய உண்வு உண்ட பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப் பட்டதால், இனி மதிய உணவை தலைமை ஆசிரியர் ருசி பார்த்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முந்தினம் மதிய உணவு உண்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று மீண்டும் ஒரு பள்ளியில் கெட்டுப் போன நீரை அருந்தியதால், மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தொடரும் இது போன்ற சம்பவங்களால் பீகார் அரசு பள்ளிகளுக்கு ஒரு புதிய உத்தரவினை அனுப்பியுள்ளது. அதில், மதிய உணவு உட்பட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தலைமை ஆசிரியர் உண்டு பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக