பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/31/2013

போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாசில்தார் சம்பளம் குறைப்பு

சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக்குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், லட்Œக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். அதேநேரம், போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

குழு நியமனம்:


இது குறித்து விசாரிக்க, தி.மு.க., அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் குழுவை நியமித்தது. இக்குழு அனைத்து வகையான, அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றது.அந்த மனுக்கள் அடிப்படையில், குழு, அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இக்குழு பரிந்துரையை அடுத்து, பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. அதிலும், முரண்பாடிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், அரசு செலவினத்துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், 2012, ஏப்ரலில் ஒரு குழுவை அமைத்தார். இக்குழுவினரும், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அவர்கள் கோரிக்கை அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

அரசாணை வெளியீடு:


அறிக்கையை பரிசீலித்த முதல்வர், குழு கூறியதன் அடிப்படையில், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, புதிய ஊதிய உயர்வுக்கு, அரசாணை வெளியிட உத்தரவிட்டார். அதன்படி கடந்த, 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது.இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயிலிருந்து, 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. ஒரே பதவியில், 10 ஆண்டுகள் பணி முடித்து, தேர்வு நிலை ஊழியர்களாக உள்ளவர்களுக்கு, 6 சதவீதம், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு அறிவித்த முதல்வருக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.இச்சூழலில், புதிய அரசாணை மூலம், பலருக்கு ஏற்கனவே பெற்ற சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளம் குறைப்பு:


வேளாண் துறையில், வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை அலுவலர்; வேளாண் பொறியியல் துறையில், உதவிப் பொறியாளர்; கால்நடைத் துறையில், உதவி இயக்குனர், ஆராய்ச்சி உதவி அலுவலர்; மீன் வளத்துறையில் ஆய்வாளர், ஆராய்ச்சி உதவியாளர்; நெடுஞ்சாலைத் துறையில், உதவிப் பொறியாளர், எலக்ட்ரானிக் பொறியாளர்; ஊரக வளர்ச்சித் துறையில், உதவிப் பொறியாளர். தொழில் துறையில், உதவிப் பொறியாளர்; தொழிற்சாலை ஆய்வுத் துறையில், தொழிற்சாலை உதவி ஆய்வாளர்; மாநில சுகாதார போக்குவரத்து துறையில், உதவிப் பொறியாளர், பணிமனை கண்காணிப்பாளர்.மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில், தொழில்நுட்ப உதவியாளர், ஜெனரல் போர்மேன்; பட்டு வளர்ச்சித்துறையில் நிர்வாக அலுவலர்; பொதுப்பணித்துறையில், இளநிலைப் பொறியாளர்; மாவட்ட மறுவாழ்வுத் துறை அலுவலர்; பேரூராட்சி உதவிப் பொறியாளர்; இளநிலை எலக்ட்ரிக்கல் ஆய்வாளர்; சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர்; வனக்காப்பாளர் ஆகியோருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இவர்கள், ஆறாவது ஊதிய உயர்வுக்கு முன், அடிப்படை சம்பளமாக, 6,500 ரூபாய் பெற்றனர். ஆறாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டபோது, அடிப்படை சம்பளம், 9,300 ரூபாயாக உயர்ந்தது. முதலில் நியமிக்கப்பட்ட, ஒரு நபர் குழு பரிந்துரைப்படி, அடிப்படை சம்பளம், 15,600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது தவறு எனக் கூறி, தற்போது அடிப்படை சம்பளம், 9,300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இழப்பு:


இதனால், இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆகியோரின் அடிப்படை சம்பளம், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன், 7,500 ரூபாயாக இருந்தது. ஊதிய உயர்வின்போது, 9,300 ரூபாயாக உயர்ந்தது. ஒரு நபர் குழு பரிந்துரைத்த பின், 15,600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும், 9,300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர்களுக்கு சிறப்பு ஊதியமாக, 1,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டோர், ஏற்கனவே வழங்கிய சம்பளத்தை வழங்க வேண்டும் என, முதல்வரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

கூடுதல் பணம் திரும்ப வசூலிக்கப்படாது:


புதிய அரசாணையின்படி, பலருடைய சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் சம்பளம், திரும்ப வசூலிக்கப்படாது. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் கூடுதலாக வழங்கப்பட்ட பணம் வசூலிக்கப்படாது. புதிய அரசாணையின்படி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, புதிய தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட, ஒரு நபர் குழு பரிந்துரை அடிப்படையில், அரசாணை வெளியிட்டபோது, இளநிலைப் பொறியாளர்களுக்கு, கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அவர்கள் அந்தஸ்தில் இருந்தோர், தங்களுக்கும் அதேபோல், கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இதை பரிசீலித்த புதிய ஒரு நபர் குழு, அவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தினால், அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் என்பதால், தவறுதலாக வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்துள்ளது. உதாரணத்திற்கு, பொதுப்பணித்துறையில் டிப்ளமோ முடித்து இளநிலைப் பொறியாளர்களாக உள்ளோருக்கு, அடிப்படை ஊதியமாக, 9,300 ரூபாய்; பி.இ., முடித்தோருக்கு, 15,600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.டிப்ளமோ முடித்து, அதே பதவியில் இருந்தோர், பி.இ., முடித்தோருக்கு வழங்கும் சம்பளத்தை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு, பி.இ., முடித்து, இளநிலைப் பொறியாளராக இருப்போரின் சம்பளத்தை குறைத்துள்ளது.இதுபோன்று, ஒவ்வொரு துறையிலும் அதிகமாக வழங்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்க முடியாது:


பொதுப்பணித் துறையில், பி.இ., முடித்து இளநிலைப் பொறியாளர்களாக இருப்போர் கூறுகையில், "எங்கள் சம்பளத்தை குறைக்க, அரசு கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. எங்களை பணியில் சேர்க்கும் போது, அடிப்படை சம்பளம், 15,600 ரூபாய் என, அறிவித்திருந்தனர். தற்போது, குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, முதல்வரிடம் எங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க உள்ளோம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக