பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/31/2013

சிவகங்கையில் மறியல் 300 ஆசிரியர்கள் கைது

சிவகங்கை : மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டம், டி.இ.டி., தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில்,300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே கூடினர். மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் கோஷம் எழுப்பினர்.
மாநில துணை தலைவர் சந்திரமோகன், நகராட்சி தலைவர் அர்ச்சுனன்,அரசு ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ.,நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
* அரண்மனைவாசல் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இணை செயலாளர் சரோஜினி தலை மை வகித்தார். 200 பெண்கள் உட்பட 300 பேர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக