பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/31/2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை, புதுக்கோட்டை, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட  ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் வேலுரில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கைதாகினர். இதில் ஆண்கள் 300 பேரும் பெண்கள் 300க்கு மேற்பட்டோரும் கலந்துக்கொண்டனர். இவர்களை கைது செய்து காலை 11.00 அம்மையப்பர் மண்டபத்தில் வைத்திருந்தனர். பின்னர் மாலை 05.00 மணிக்கு விடுவித்தனர்.
 
புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக