பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/31/2013

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சிவகங்கையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியைகள் உள்பட 700 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
   போராட்டத்திற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம். அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செ. சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தாமஸ் அமல்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மெய்யப்பன், சிஐடியு. மாவட்டச் செயலாளர் பி. வடிவேலு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார், கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் போஸ், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
 Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக