பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/11/2013

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்

தமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற
4 பிரிவுகளில், அதிகாரிகள் முதல்
கடைநிலை ஊழியர்கள்
வரை வேலை பார்க்கின்றனர். 4
பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30
ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
இதுதவிர, 5 லட்சத்து 20 ஆயிரம் பேர்
ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள்,
குறிப்பாக 2014-ம் ஆண்டு மார்ச் மாத
இறுதிக்குள், மொத்த ஊழியர்களில் 20 சதவீதம்
பேர் ஓய்வுபெற இருக்கின்றனர். அதாவது, 2
லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால்,
மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும்.
அரசுக்கு தற்போதுள்ள நிதிச் சுமையால்,
ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப
முடியாத நிலை உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக
பணியாளர் தேர்வு நடத்தி, காலிப்
பணியிடங்களை நிரப்ப முடியும்.
ஆனால், ஒரு சில பிரிவுகளில்
காலி பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப
வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அந்தப்
பிரிவுகளில் கம்ப்யூட்டர், பேக்ஸ், மொபைல்
போன் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதனால்,
முன்பு இருந்த அளவு பணியாளர்கள்
தேவையில்லை.
மேலும், பென்ஷன் தாரர்கள் எண்ணிக்கையில்
ஓய்வுபெறும் இந்த 2 லட்சம் பேர் சேரும்
நிலையில், மேலும் அதே அளவு பணியாளர்கள்
வேலைக்கு சேர்க்கப்பட்டால்
நிதிச்சுமை மேலும் அதிகமாகும்.
இதே அளவிலான பணியாளர்கள் 2016-ம்
ஆண்டும் ஓய்வுபெற உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக