பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/26/2013

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏமாற்றம்

மாநில அரசு, பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது; முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக, மாவட்டந்தோறும், கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன; மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள், 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ, மாணவியர் வீதம், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை பின்னுக்கு தள்ளி, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி
மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டு' எனப்படும் செஸ் விளையாட்டை, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்; பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று, அதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, பயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்' உபகரணம் வைத்து, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர்.மாறாக, கிராமப்புற அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, செஸ் விளையாட்டு என்பது புதிது; அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்' இல்லாமல், விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள், மெட்ரிக்., பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர்

"டைமர்' வைத்து, நுட்பத்துடன் விளையாடிதை பார்த்து, அரசு பள்ளி மாணவர்கள் பயந்து, நிலை குலைந்து போயினர்.

மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையான திறமையை அரசு பள்ளி மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

செஸ் போர்டு எங்கே?"மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் பள்ளிகளுக்கு, தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு, அதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்; பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்' உருவாக்கப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; பல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவே, இச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களைய, மாநில அரசு முன்வர வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக