பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/28/2013

மாணவர் சேர்க்கை இல்லாததால் உதவி பெறும் பள்ளி அரசிடம் ஒப்படைப்பு!

வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து வருகின்றன.

கோவை மாவட்டம், வால்பாறை அருகிலுள்ள மானாம்பள்ளி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் போதிய மாணவர் வருகை இல்லாததால் பள்ளியை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த மாதம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

அதேபோல வால்பாறையில் உள்ள ஹை பாரஸ்ட் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளியைத் தொடர்ந்து நடத்திட உறுதி அளித்துள்ளதாக, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக