பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

4/30/2014

பிரச்னை காரணமாக ஊதியம் பெறாதோருக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

பணியில் இருந்து இடை நீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் ஊதியம் பெறாதவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக நிதித் துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம், படிகள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அகவிலைப்படியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் புதிய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஊதியக் குழுவின் பரிந்துரையில் தங்களது சொந்த பிரச்னைகளின் அடிப்படையில் அதை ஏற்காத இயலாதவர்கள், பணியின் போது இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஊதியம் மற்றும் அகவிலைப்படியை பெறமுடியாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் 2006-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியையே பெற்று வருகிறார்கள். அவர்களது அகவிலைப்படி ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதாவது இந்த உயர்வு என்பது ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்படி ஊதியம் பெறுபவர்களுக்கும் மட்டுமே பொருந்துவதாக இருந்தது.
அகவிலைப்படி உயர்வு: ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் முரண்பாடு உள்ளவர்கள், பணியின் போது இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் போன்றோருக்கு அகவிலைப்படி உயர்வு ஏதும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் அகவிலைப்படியானது 183 சதவீதமாக இருந்தது. அதாவது அகவிலைப்படி 100 சதவீதத்தைத் தாண்டும் போதோ அல்லது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தும் போதோ அகவிலைப்படியின் 50 சதவீதம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை, இடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதுபோன்று செய்யப்படாமல் இருந்ததால், அகவிலைப்படியானது 183 சதவீதமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர்களின் நிலையினையும் கருத்திற்கொண்டு அவர்களின் அகவிலைப்படியானது 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று நிதித் துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழல்நுட்பக் கல்விக் குழு ஊதிய வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோர்க்கும் பொருந்தும் என தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார்.
இந்த உயர்வுக்காக, மாநிலக் கணக்குத் துறைத் தலைவரின் அனுமதிக்காகக் காத்திருக்காமல், திருத்தப்பட்ட அகவிலைப்படியை கருவூல அலுவலர்கள் அல்லது சம்பளக் கணக்குகள் அலுவலர்கள் வழங்க வேண்டும் என்றும் உதயசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக