காளையார்கோவில்: காளையார்கோவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், அறிவியல் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
முதல்வர் ரஞ்சனி துவக்கி வைத்தார். பேராசிரியர் ஆனந்தி போட்டியை நடத்தினார். மரக்காத்தூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், மேலமருங்கூர் பள்ளி இரண்டாவது இடமும், கவுரிபட்டி பள்ளி மூன்றாவது இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சுப்ரீம் பட்டயத்தலைவர் ஆரோக்கியசாமி , தலைவர் ஞனாபிரகாசம், செயலாளர் அருள்சாமி, மாவட்டதுணைத்தலைவர் ரகுபதி பரிசு வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக