பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/18/2014

கிராமக்கல்விக்குழு கணக்காளர்?பணியிடத்துக்கு விண்ணப்பங்கள்?வரவேற்பு

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில், கிராமக்கல்விக்குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கிவரும் 12 வட்டார வளமையங்களில், காலியாக உள்ள 24 தொகுப்பூதிய கிராமக்கல்விக்குழு கணக்காளர் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் ‘டாலி’ செய்முறைத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் நாளை (ஆக.19) முதல் சிவகங்கை, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் (அரசு மருதுபாண்டியர் நகர் பள்ளி வளாகம்) இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இப்பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பி.காம் தேர்ச்சி மற்றும் ‘டாலி‘  தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். எம்.காம், எம்பிஏ, சிஏ/ஐசிடபிள்யூ/சிஎஸ் (இண்டர்) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் கல்வித்தகுதியாக கருதப்பட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். வயது வரம்பு, 2014, ஆக.1 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோறும் ரூ.9ஆயிரத்து 900 தொகுப்பூதியம் மற்றும் பயணப்படி வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சல் மூலமோ வரும் செப்.1ம் தேதிக்குள் சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்துதேர்வு செப்.13ல் நடக்கிறது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்.18 முதல் செப்.20 வரை செய்முறை தேர்வு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக