தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறை உத்தரவினை கண்டித்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஞானஅற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணை செயலாளர் பாலா, கூட்டுறவு சங்க தலைவர் சரேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வைரம், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, கௌசல்யா, கஸ்தூரி, மெர்லின் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக