பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/09/2014

ஆசிரியர்களே உஷார்

இன்று (9.9.2014) சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் தந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்டை(சீன தயாரிப்பு) ஆசையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளான். மாணவர்கள் சாக்லெட் உண்ட சிறிது நேரத்திற்குள் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் வாந்தி எடுத்துள்ளனர். உஷாரான தலைமையாசிரியர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்து துரித வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வரும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக TNPTF நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்த AEEO, DEEO மற்றும் CEO அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். எனவே ஆசிரியப்பெருமக்களே தங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர். மாணவர் நலனே நமக்கு முக்கியம். மாணவர்களுக்கு விரைவாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கும் அதற்கு உறுதுணை புரிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்துணைத்தலைவர் தோழர் ஜோசப் ரோஸ் மற்றும் மாவட்டச்செயலாளர் தோழர் தாமஸ்  அமலநாதன் மற்றும் நிர்வாகிகளுக்கும் இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக