பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/02/2011

கருணாநிதி கவிதைக்காக சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தமா?முதல்வர் ஜெயலலிதா பேட்டி


சென்னை : ""கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான பிரச்னையில், அரசு தலையிட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகிறார்களே?

இது தொடர்பாக, எந்தவித மனுவும் இதுவரை பெறப்படவில்லை. பெற்றோர்களோ, பள்ளிகளோ, அரசு தலையிடக்கோரி கேட்டுக்கொண்டால், அவர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த பிரச்னை தொடர்பாக, போராட்டம் நடத்துகிறார்களே?

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஏற்கக் கூடியதாக இல்லை என்று பள்ளிகள் கருதினாலோ அல்லது இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் நினைத்தாலோ, அரசிடம் முறையிடலாம். போராட்டம் நடத்துவது தேவையற்றது.
பொறியியல் கவுன்சிலிங், சென்னையில் மட்டும் நடைபெறுமா? அல்லது, வேறு நகரங்களிலும் நடத்தப்படுமா?

சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்தது குறித்து?

இது தொடர்பாக, ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துள்ளோம். மூன்றாம் தேதி கவர்னர் உரை நிகழ்த்த இருக்கும் போது, அனைத்து விவரங்களையும் இப்போது வெளியிடுவது சரியாக இருக்காது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக, "நான் எழுதிய கவிதைகளை மட்டும் நீக்கிவிட்டாவது, திட்டத்தை அமல்படுத்தலாமே' என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

இந்த பேச்சு, குழந்தைத்தனமானது. அவர் கவிதை எழுதினார் என்பதற்காக, நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக